Subscribe Us

header ads

எவன்கார்ட் விசாரணையை நான் பொறுப்பேற்று நடத்த போகின்றேன் : ஜனாதிபதி அதிரடி தீர்மானம்

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல்  தொடர்பான அனைத்து விசாரணைகளையும்  தான் பொறுப்பேற்று நடத்த தீர்மானித்திருப்பதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது  அறிவித்துள்ளார். 

அனைத்து விசாரணைகளும் தனது மேற்பார்வையிலேயே இடம்பெறும் என்றும் அறிவித்துள்ள ஜனாதிபதி சட்டம்  ஒழுங்கு  மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரான திலக் மாரப்பனவின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான சூழ்நிலையில் இன்று  திங்கட்கிழமை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தலைமையில்  ஜனாதிபதி செயலகத்தில் விசேட அமைச்சரவைக் கூட்டம்  இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Post a Comment

0 Comments