Subscribe Us

header ads

புற்றுநோயை குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறை - இம்யூனோ தெரபி

புற்றுநோய் பாதித்துவிட்டால் அவற்றை கண்டறியும் நிலையை வைத்து தான் அதனை குணப்படுத்த இய லுமா? இயலாதா? என்பதைத் தான் இதுநாள் வரை மருத்துவ உலகம் கூறி வந்தது. அத்துடன் புற்றுநோயை குணப்படுத்த அல்லது நிவாரணம் கிடைக்க ரேடியோ தெரபி, கீமோ தெரபி, சத்திர சிகிச்சை ஆகிய மூன்று சிகிச்சை முறைகள் தான் இருந்து வந்தன. தற்போது நான்காவது சிகிச்சை முறையாகவும், புதிய சிகிச்சை முறையாகவும் இம்யூனோ தெரபி என்ற ஒரு சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர்.
புற்றுநோயை குணப்படுத்துவதற்காக வழங்கப்படும் இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒன்றாக கொடுத்தி ருக்கின்றனர். இதனால் மெலனோமா எனப்படும் முற்றிய நிலை தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் அறுபது சதவீதத்தினருக்கு புற்றுநோய் கட்டிகள் சுருங்கி விட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்திருக்கும் மருத்துவ ஆய்வாளர்கள், தங்களின் இந்த இம்யூனோ தெரபி குறித்த ஆய்வை தொடர்கின்றனர்.
தோலில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டிகளை இவ்வித சிகிச்சை முறையால் சுருங்கச் செய்துவிட்டாலும், இதே முறைமை அனைத்து புற்றுநோய்களுக்கும் பொருந்துமா? என்பது குறித்தும், அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே விதமான பலன்களை தருகிறதா என்பது குறித்தும் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த இம்யூனோ தெரபி எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
எம்முடைய உடலில் இயற்கையாகவே வெளி யிலிருந்து உடலுக்குள் புகும் கிருமிகளை எதிர்த்து அழிக்கவும், உள்ளுக்குள்ளேயே இருந்து நோயை உருவாக்கும் கிருமிகளை அழிக்கும் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு ஒன்று இருக்கிறது. இதனை மருத்து வத்துறையினர் இம்யூன் சிஸ்டம் என்று குறிப்பிடுகிறார்கள். இதில் வேறு சில தடுப்புகளும் உண்டு. உட லிலுள்ள ஆரோக்கியமான திசுக்களை இந்த நோய் எதிர்ப்பு கட்டமைப்பு தவறுதலாக அழித்து விடாமல் பாதுகாப்பதற்காகவே சில தடுப்புகள் பணியாற்றுகின்றன.
உடல் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் நோய் பாதித்த திசுக்களைத்தான் புற்று என்று நாம் அடையாளப் படுத்துகிறோம். ஆனால் ஒரு சில தருணங்களில் இந்த நோய் பாதித்த திசுக்கள், தங்களை நோய் பாதித்த திசு என்று காட்டிக்கொள்ளாமல் நல்ல திசுக்கள் போல் காட் டிக்கொள்வதால், இதனை இம்யூன் சிஸ்டம் போராடி அழிக்காமல் விட்டுவிடுகிறது. நாளடைவில் இந்த கெட்ட திசுக்கள் கூட்டமாக ஒன்றிணைந்து, வளர்ந்து புற்று நோயாக மாறுகின்றன.
இவைகள் சுரக்கும் ஒருவித புரதம், நோய் எதிர்ப்பு சக்தியுடன் வேதியல் வினை புரிந்து, அந்த வினைக்கு எதிர் வினையாற்றாமல் மயங்கிவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் செயலிழந்துவிடுகிறது. இதனால் அங்கு புற்றுநோய் செல்கள் அழிக்கப்படாமல் உள்ளன. தற்போது ஆய்வாளர்கள் அளித்த இரண்டு வெவ்வேறு மருந்துகள் தங்களின் பணிகளை கூட்டாக செய்ததால், இந்நிலை தடுக்கப்பட்டு இம்யூன் சிஸ்டம் தூண்டப்பட்டு நோயை உருவாக்கிய செல்களை அழிக்க போராடியது.
மருத்துவ ரீதியாக விளக்கவேண்டும் என்றால், கெட்ட திசுக்கள் சுரக்கும் புரதத்தின் வேதியல் வினையை இந்த கூட்டு மருந்து சிகிச்சை தடை செய்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு அங்குள்ள கெட்ட திசுக்களும், அவை சுரக்கும் புரதமும் முற்றாக அழிக் கப்படுகின்றன,

இதேபோன்றதொரு சிகிச்சையை தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டறிந்திருக்கின்றனர். இதன் மூலம் எம்முடைய உடலில் இயற்கையாக அமைந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பான இம்யூன் சிஸ்டத்தை தொடர்ந்து மருந்துகளால் வலுப்படுத்தி புற்று நோயை குணப்படுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இருப்பினும் இம்முறையில் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து இன்னும் முழுமையாக கண்டறியப்படாததால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த இம்யூனோ தெரபி மூலம் தொடக்க நிலை மற்றும் முற்றிய நிலைக்கு முன்னர் உள்ள புற்றுநோய்களை குணப் படுத்த முடியும் என்ற புதிய நம்பிக்கையை மருத்துவ உலகம் எமக்களித் திருக்கிறது என்பது மட்டும் உண்மை.
டாக்டர். பி. ராஜ்குமார்
தொகுப்பு: அனுஷா

Post a Comment

0 Comments