நல்லொழுக்கம் மிக்க சமூகம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசாங்கம் என்ற கனவை யதார்த்தமாக்கிக்கொள்ள அஹிம்சாவாத கொள்கையுடன் போராடிய பரிசுத்தமான பௌத்தரை எமது நாடு இழந்துள்ளது. எந்தக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்படும்பட்சத்தில் அதற்கெதிராக மாதுலுவாவே சோபித தேரர் குரல்கொடுத்து தமது மேன்மையான பங்களிப்பை முன்னெடுத்து வந்தார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கோட்டே நாக விஹாரையின் விஹாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளருமான மாதுலுவாவே சோபித தேரரின் மறைவையொட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,
பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நல்லொழுக்கம் மிக்க சமூகம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசாங்கம் என்ற கனவை யதார்த்தமாக்கிக்கொள்ள அஹிம்சாவாத கொள்கையுடன் போராடிய பரிசுத்தமான பௌத்தரை எமது நாடு இழந்துள்ளது. கோட்டே நாக விஹாரையின் விஹாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளருமான மாதுலுவாவே சோபித தேரரின் மறைவு நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு.
1942 மே மாதம் 29 ஆம் திகதி பாதுக்கை மாதுலுவாவ என்ற இடத்தில் பிறந்த இவர் வித்தியாலங்கார, வித்யோதய பல்கலைக்கழகங்களில் தமது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டார். அன்றிலிருந்து அவர் மறைந்த காலம் வரையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலான நாட்டை உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்துடனும் மக்களுடனும் ஒன்றிணைந்து செயற்பட்டார்.
எந்த கட்சி நாட்டை ஆட்சி செய்தாலும் நாட்டில் ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்படுத்தப்படும் போது அச்சமின்றி சோபித தேரர் குரல் கொடுத்தார். இதன் போது நாட்டின் நலனை மட்டும் கருத்திற்கொண்டு அவர் செயற்பட்டார்.
சோபித தேரர் கூறியது போன்று ஒரு வலுவான சமூக கட்டமைப்பை உறுதிப் படுத்துவது அரசாங்கத்தின் கடமை. அதற் காக இந்நாட்டு மக்களும் தமது பங்க ளிப்பை வழங்க வேண்டும். சோபித தேரரின் இழப்பை ஈடுசெய்ய முடியாத அதேவேளை அவரின் ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த் திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.-Virakesari-
0 Comments