
குறிப்பாக 2ம் வாட்டில் உள்ள மலசல கூடம் சேதமடைந்துள்ளதுடன், அதனை நாளாந்தம் துப்பரவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு வாட்டுகளிலும் நாளுக்கு நாள் பல நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் நாளுக்கு நாள் குறித்த மலசலகூடங்கள் துப்பரவு செய்யப்படுவதில்லை என்றும் கிழமையில் ஓரிரு தினங்கள் மட்டுமே துப்பரவு செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த மலசலகூடங்களை துப்பரவு செய்வதற்கு சிற்றூழியர்கள் சேவையில் உள்ளபோதும் அவர்கள் துப்பரவு விடயத்தில் அசமந்தபோக்காக செயற்படுவதற்கு என்ன காரணம்? என்று தெரியவில்லை என தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட நோயாளிகள், குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததிற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
“வீடு பக்கத்தில் இருந்தால் காலைக்கடன்கழிக்க வீட்டுக்குசரிபோயிற்று வரலாம் இங்கு அதுவுமில்லை” என தெரிவிக்கின்றார்கள். நோயாளிகள், மனம்சுழிக்கும் வகையில் சுத்தமற்று மலசலகூடங்கள் இருப்பதாக தெரிவிக்கும் பாதிக்கபட்டவர்கள், வைத்தியசாலை நிர்வாகம் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments