Subscribe Us

header ads

ரஜமஹா விகாரையில் ரூ.860,000 பணம் கொள்ளை

மஹியங்கனை, ரஜமஹா விகாரையின் விஹாராதிபதியின் அறையிலிருந்து சுமார் 860,000 ரூபாய் பணம், வீடியோ கமரா மற்றும் பெறுமதிமிக்க கடிகாரம் என்பன நேற்று பகல்  கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விஹாராதிபதியின் அறைக்கு ஜன்னல் வழியாக நுழைந்தவர்கள் இப்பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments