எட்டு மாதங்களுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த இளம் வயது சிறுமி ஒருத்தி சில தினங்களுக்கு முன்னர் குளியாப்பிட்டி வைத்தியசாலை யில் குழந்தை ஒன்றைப் பிரசவித்துள்ளார். இந்நிலையில் அந்தக் குழந்தையின் தந்தை என சந்தேகிக்கப்படும் தங்கொட்டுவ மோருக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரை தங்கொட்டுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சிறுமியின் அயல் வீட்டுக்காரரான கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் குறித்த சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளதோடு சிறுமியின் பெற்றோருடனும் உறவை பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 15 வயதும் ஒன்பது மாதங்களும் உடைய இச்சிறுமி கடந்த மார்ச் மாதம் தனது பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வார இறுதியில் தங்கொட்டுவ மொஹொட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அச்சிறுமி வைத்தியசாலையில் குழந்தை ஒன் றைப் பிரசவித்துள்ளதாகவும் குளியாப்பிட்டி வைத்தியசாலை நிர்வாகம் தங்கொட்டுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து குளியாப்பிட்டி வைத்தியசாலைக்குச் சென்று விசாரணை செய்த தங்கொட்டு பொலிஸார் குழந்தை பிரசவித்த சிறுமி கடந்த மார்ச் மாதம் தங்கொட்டுவ மோருக்குளிய பிரதேசத்திலிருந்து காணாமல் போன சிறுமி என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். பின்னர் அச்சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தான் பிரசவித்த குழந்தையின் தந்தை தனது ஊரில் வசிக்கும் சாராய முதலாளி என அச்சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் குறித்த சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ள நிலையில் வீட்டில் சிறுமி மாத்திரம் இருந்த சந்தர்ப்பங்களில் சிறுமியை ஏமாற்றி பல சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளதாகவும், இதனால் சிறுமி கர்ப்பமடைந்ததால் சந்தேகநபர் சிறுமியை இரகசியமாக வீட்டிலிருந்து அழைத்துச் சென்று குளியாப்பிட்டியில் வீடொன்றில் தங்க வைத்திருந்ததாகவும், அங்கு அச்சிறுமிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதா கவும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்ப தாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments