கிழக்கு மாகாண சபையின் CBG 2015 செயற்திட்ட நிதி ஒதுக்கீட்டில் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு மினி ஒலி பெருக்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (20) வெள்ளிக்கிழமை காலை காரைதீவு சண்முகா மாகா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக அம்பாறை மாவட்டக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபையிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அங்கு சுகாதார அமைச்சர் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாட்டங்களிலும் இருந்து 215 பாலர் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருகோணமலை மாவட்டத்தில் 55 பாலர் பாடசாலைகளும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 70 பாலர் பாடசாலைகளும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 90 பாலர் பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் மிக கூடுதலான பாலர் பாடசாலைகள் அம்பாறை மாவட்டத்திலேயே காணப்படுகின்றது.
பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் பாலர்களின் அறிவு விருத்தியை மென்மேலும் அதிகரிக்கச் செய்வது இன்றைய காலத்தின் தேவையா உள்ளது. அதனை மய்யப்படுத்தி பாலர்களின் விளையாட்டு செயற்பாடுகளோடு இந்த ஒலி பெருக்கி சாதணங்களை பயன்படுத்தி அவர்களின் செயற்திறன்களை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்ற நோக்கில் மாகாண சபை ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்து இன்று CBG 2015 செயற்திட்ட நிதி ஒதுக்கீட்டில் கீழ்கிழக்கு மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு இந்த மினி ஒலி பெருக்கியை வழங்கி வைத்து வருகின்றோம் என்றார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்த சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீருக்கு கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக அம்பாறை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபையிர் பொண்னாடை போர்த்தி ஞாபகச் சின்னத்தையும் வழங்கி கௌரவித்தார்.
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டி.டி.மெத்தானந்த, சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியக அம்பாறை மாவட்டக் காரியாலயத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
அபு அலா -
0 Comments