சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் சுட்டுக் கொலை செய்த காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் இக்காணொளி 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதெனவும் , கொல்லப்பட்டவர்கள் சிரியநாட்டு ஜனாதிபதி அசாத்தின் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
யேமனைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவரே இக்காணொளியை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை தரையில் வரிசையாக படுக்க வைத்து ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் துப்பாக்கியால் மிருகத்தனமாக சுட்டுக் கொலை செய்வதாக அக்காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்த து.
எனினும் அக்காணொளி ஐ.எஸ் இயக்கத்தினால் பிடிக்கப்பட்ட சிரிய ஜனாதிபதி ஆதரவுப் படையினருடையது என தெரிவிக்கப்படுகின்றது .
0 Comments