Subscribe Us

header ads

புத்தளத்தில் வீடுகளுக்குள் நுழைந்த மர்ம கும்பல்: பெண்களின் அறைகளை குறிவைக்கும் மர்மம் (படங்கள்)

புத்தளம் , தில்லையடி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடுகளின் ஜன்னல்களின் இரும்புச் சட்டங்களை கழற்றி வீட்டுகளுக்குள் இரகசியமாக நுழைந்த கும்பலொன்று தொடர்பில் புத்தளம் பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடுகள் பலவற்றுக்குள் ஒரே நாள் இரவில் புகுந்து அவ்வீடுகளில் உள்ள பெண்கள் தங்கியுள்ள அறைகள் தொடர்பில் தேடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பெண்ணொருவர் இவ்வாறு நுழைந்தவர்கள் தனது 6 வயது மகள் உறங்கிக்கொண்டிருந்த அறைக்கு வந்ததாகவும் ,அங்கிருந்த கொசு வலையை அகற்றி அங்கிருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் பின்னர் அவர்கள் நுழைந்த ஜன்னலை கற்களால் கட்டி அடைத்துவிட்டதாகவும் ஆனால் தமக்கு இனம்புரியாத பயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ்வாறு வீட்டுக்குள் நுழைந்துள்ள கும்பல் பெண்கள் தங்கியுள்ள அறைகளுக்குள் நுழைந்து அங்கிருந்த உடைகள் அடங்கியுள்ள பைகளை தேடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments