Subscribe Us

header ads

மரணதண்டனை அமுல்படுத்தப்படாது என ஐ.நா.வில் அரசாங்கம் உறுதியளித்துள்ளது

இலங்­கையில் மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தில்­லை­யென அர­சாங்கம் ஐ.நா.வில் உறு­தி­யா­ளித்­துள்­ளது எனத் தெரி­வித்த அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ, குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­ட­னைகள் புனர்­வாழ்­வ­ளிக்கும் வித­மாக அமைய வேண்­டுமே தவிர பழி­வாங்­கு­வ­தாக அமை­யக்­கூ­டாது என்றும் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மரண தண்­டனை தொடர்­பான ஒத்­தி­வைப்பு பிரே­ரணை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ இதனைத் தெரி­வித்தார்.
சபையில் அமைச்சர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இன்று மரண தண்­டனை வழங்­கப்­பட வேண்­டுமா? இல்­லையா? என்­பது தொடர்­பான விவாதம் எழுந்­துள்­ளது. உலகில் 100 நாடு­க­ளுக்கு மேல் மரண தண்­டனை நீக்­கப்­பட்­டுள்­ளது.
இதற்கு எதி­ராக இன்று குரல் கொடுக்­கப்படுகின்­றது. மனித உரிமை அமைப்­புகள் போரா­டு­கின்­றன. கண்­ணுக்கு கண் பல்­லுக்கு பல் என்ற சட்­டங்கள் பிரித்­தா­னியர் காலத்தில் காணப்­பட்­டன.
இன்று உலகம் பழை­மை­யான பழி­வாங்­கல்கள் தண்­டனை முறை­மை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு ஒழுக்க விழு­மி­யங்­களை கொண்ட தண்­ட­னை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கி­யுள்­ளது.
குற்றம் செய்­த­வர்­களை பழி­வாங்­கு­வ­தற்­கான தண்­ட­னைகள் அல்ல. குற்றம் செய்­த­வர்கள் திருந்தி வாழ்­வ­தற்­கான புனர்­வாழ்வு வழங்­கப்­பட வேண்டும். அதுவே நவீன உலகின் முற்­போக்கு சிந்­த­னை­யாகும்.
சட்­டங்கள் பழி­வாங்கும் நோக்கில் அமையக் கூடாது. உலகில் பல்­வேறு நாடு­களில் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்படுவ­தில்லை. ஐ.நா சபையில் மரண தண்­டனை உலகில் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட வேண்டும் என்ற பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது.இதற்கு இலங்கை ஆத­ரவு வழங்­கி­யது.
இலங்கை மீது இன்று மனித உரிமை குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு உலகம் எம்மை திரும்பி பார்த்தும் கொண்­டி­ருக்­கின்­றது.எனவே,வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் அண்­மையில் ஐ.நா சபையில் உரை­யாற்றும் போது இலங்­கையில் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­த­ப­ட­மாட்­டாது எனத் தெரி­வித்தார். இம் முறை ஐ.நா. கூட்­டத்தில் உரை­யாற்­றிய புனித பாப்­ப­ர­சரும் உலகில் மரண தண்­டனை நிறுத்­தப்­பட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்­தியா, சீனா போன்ற நாடு­க­ளிலும் இன்று மரண தண்­டனை வழங்­கு­வது தொடர்­பாக மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது.இது தொடர்பில் குற்றச்செயல்களை வகைப்படுத்தி தண்டனை வழங்குவது தொடர்பிலும் பரிந்துரைகள் தெரிவிக்கப் பட்டுள்ளன என்றார்.

Post a Comment

0 Comments