பாடசாலையில் மாணவனை சேர்க்க தாயொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய ஹொரணை- இங்கிரிய- கிரிகல சாகர பலன்சூரிய வித்தியாலயத்தின் அதிபர் பணிநீக்கம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் தினமான நேற்று குறித்த அதிபர் பிள்ளையொருவரின் தாயிடம் பாலியல் இலஞ்சம் பெறும் பொருட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கு சென்றுள்ளார்.
எனினும் அப்பெண் இது தொடர்பில் ஏற்கனவே கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து இங்கிரிய- எலபட பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் இருந்த அதிபரை கல்வி திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் குறித்த அதிபரை பணிநீக்கம் செய்யும் படி வலியுறுத்தி மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் , மாகாண கல்விச் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் தினமான நேற்று குறித்த அதிபர் பிள்ளையொருவரின் தாயிடம் பாலியல் இலஞ்சம் பெறும் பொருட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கு சென்றுள்ளார்.
எனினும் அப்பெண் இது தொடர்பில் ஏற்கனவே கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து இங்கிரிய- எலபட பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் இருந்த அதிபரை கல்வி திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில் குறித்த அதிபரை பணிநீக்கம் செய்யும் படி வலியுறுத்தி மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் , மாகாண கல்விச் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments