துருக்கி நாட்டின் அங்கரா நகரத்தில் 11-12ம் திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது ஆசிய பசுபிக் நாடுகளின் முஸ்லிம் தலைவர்களின் உச்சி மகாநாட்டில் கலந்து கொள்ள தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார  அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் ஜெம்மியதுல் உலமா தலைவர்  அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களும் இன்று துருக்கி பயணமாகிறார்கள்.

இலங்கையின் சார்பாக கலந்து கொள்ளும் இவர்களுடன் அமைச்சரின் அந்தரங்க செயலாளர் பாஹிம் ஹாஷிம் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் இயக்குனர் ஜனாப் ஸமீல் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.

_Post Media_