சவுதி அரேபிய மன்னர் சல்மானை(79) அகற்றிவிட்டு, அவரது சகோதரர் இளவரசர் அகமது பின் அல்துல் அஜீசை(73) மன்னராக்க மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் பரம்பரையில் வரும் 12 மகன்களில் உயிருடன் உள்ள எட்டு மகன்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தற்போதைய மன்னரின் பேரனும், அரசியல் காரணங்களால் பெயர் வெளியிட முடியாத அதிருப்தி இளவரசருமான ஒருவர் எழுதியுள்ள இரண்டு கடிதங்களில் கூறியுள்ளார்.
ஞாபக மறதி நோயினால் அவதிப்படும் மன்னர் சல்மானை பதவி நீக்கம் செய்து அரச குடும்பத்தில் வேறொருவரை மன்னராக்க வேண்டும் என்று பல வருடங்களாக அக்குடும்பத்தில் முயற்சி நடைபெற்று வருகிறது. இதுபற்றி அதிருப்தி இளவரசர் எழுதி, சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் சக்தி வாய்ந்த மத அமைப்பான உலமாவும் மன்னரை மாற்றி அமைப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளது. இளவரசர் அகமது ஏற்கனவே உள்துறை அமைச்சராக ராஜாங்கத்தில் பதவி வகித்தவர். உலாமாவும், வேறு பல மத அமைப்புகளில் இருந்தும் 75%க்கும் அதிகமானோர் இளவரசர் அகமது, மன்னராக நியமிக்கப்படுவதற்கு ஆதரவு அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் மன்னர் சல்மான் அரியணையை துறக்க முடிவு செய்ததும், விவகாரம் வெடிக்கத் தொடங்கியது. சமீபத்திய ஹஜ் துயரங்கள், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நிதி நெருக்கடி ஏற்படும் எனும் சர்வதேச நிதியத்தின் எச்சரிக்கை, மண்டலத்தில் நடைபெற்று வரும் போர்களால் பொருளாதார சீர்குலைவு என இப்போதுள்ள மன்னருக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
ஞாபக மறதி நோயினால் அவதிப்படும் மன்னர் சல்மானை பதவி நீக்கம் செய்து அரச குடும்பத்தில் வேறொருவரை மன்னராக்க வேண்டும் என்று பல வருடங்களாக அக்குடும்பத்தில் முயற்சி நடைபெற்று வருகிறது. இதுபற்றி அதிருப்தி இளவரசர் எழுதி, சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் சக்தி வாய்ந்த மத அமைப்பான உலமாவும் மன்னரை மாற்றி அமைப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளது. இளவரசர் அகமது ஏற்கனவே உள்துறை அமைச்சராக ராஜாங்கத்தில் பதவி வகித்தவர். உலாமாவும், வேறு பல மத அமைப்புகளில் இருந்தும் 75%க்கும் அதிகமானோர் இளவரசர் அகமது, மன்னராக நியமிக்கப்படுவதற்கு ஆதரவு அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் மன்னர் சல்மான் அரியணையை துறக்க முடிவு செய்ததும், விவகாரம் வெடிக்கத் தொடங்கியது. சமீபத்திய ஹஜ் துயரங்கள், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நிதி நெருக்கடி ஏற்படும் எனும் சர்வதேச நிதியத்தின் எச்சரிக்கை, மண்டலத்தில் நடைபெற்று வரும் போர்களால் பொருளாதார சீர்குலைவு என இப்போதுள்ள மன்னருக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
0 Comments