அனுராதபுரம் - கடபனஹா பிரதேசத்தில் இரவு களியாட்ட விடுதியின் உரிமையாளரை கொலைசெய்வதற்கு திட்டம் வகுத்த ராணுவ விசேட படையணியின் உறுப்பினர்கள் உட்பட ஏனைய சந்தேகநபர்களை எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கராட்டே வீரரான வசந்த சொய்சாவின் இரவு களியாட்ட விடுதியில் அத்துமீறி நுழைந்த சிலர் உடமைகளுக்கு சேதம் விளைவித்ததுடன் அங்கிருந்த பணியாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
அனுராதபுரம் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் எமது செய்திச் சேவைக்கு தகவல் தருகையில், எஞ்சிய சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளின் மூலம் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே, 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று அனுராதபுரம் நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி இரவு முகத்தை மறைத்துக்கொண்டு வந்த 20 பேருக்கும் அதிகமானவர்கள், இரவு களியாட்ட விடுதியை தாக்கி சேதமாக்கியதுடன், உரிமையாளரையும் கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
கராட்டே வீரரான வசந்த சொய்சாவின் இரவு களியாட்ட விடுதியில் அத்துமீறி நுழைந்த சிலர் உடமைகளுக்கு சேதம் விளைவித்ததுடன் அங்கிருந்த பணியாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
அனுராதபுரம் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் எமது செய்திச் சேவைக்கு தகவல் தருகையில், எஞ்சிய சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளின் மூலம் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே, 8 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று அனுராதபுரம் நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி இரவு முகத்தை மறைத்துக்கொண்டு வந்த 20 பேருக்கும் அதிகமானவர்கள், இரவு களியாட்ட விடுதியை தாக்கி சேதமாக்கியதுடன், உரிமையாளரையும் கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments