டாக்டர் அமரர் செல்வி சிவா சின்னத்தம்பியினால் கொழும்பு பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கென அன்பளிப்பு செய்யயப்பட்ட கொழும்பில் உள்ள இல்லத்தில் பெறுமதிமிக்க தளபாடங்கள் உள்ளிட்ட மிதக்கும் பொருட்களை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் சபை முதல்வரையடுத்து ஐந்தாவது ஆசனத்திற்கு சொந்தமானவரே திருடிச் சென்றுள்ளார்.
இந்தத் திருட்டு தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்ற நிலை என்ன என்று எதிர்க்கட்சிப் பிரதம கொறடாவான அனுர குமார திசாநாயக்க நேற்று சபையில் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல கூறுகையில் குறித்த சம்பவமானது 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகும். இது தொடர்பில் இரகசிய பொலிஸாருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் வைத்தியப் பெண்மணி ஒருவரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மேற்படி இல்லமானது இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாது உல்லாச விடுதியாகவும் கடந்த அரசாங்கம் பாவனைக்குட்படுத்தியிருப்பது பாரிய குற்றச் செயலாகும் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய செவ்வாய்க்கிழமை அமர்வில் வாய்மூல விடைக்கான நேரத்தில் ஜே.வி.பி.யின் நலிந்த ஜயதிலக்க எம்.பி. யினால் தொடுக்கப்பட்டிருந்த கேள்வியில் இடைக் கேள்வியொன்றை எழுப்பியபோதே அனுர குமார திசாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியதுடன் அமைச்சரும் பதிலளித்தார்.
கொழும்பு 7, ஹேவா ஒழுங்கையில் 11 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளதான மருத்துவர் சிவா சின்னத்தம்பிக்குச் சொந்தமான இல்லம் அவரால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதிக்கென அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது.
நல்லெண்ணத்தின் அடிப்படையில் இவ்வாறு தமிழ் மருத்துவர் ஒருவரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இல்லமானது வழக்கு விசாரணை ஒன்றின் காரணமாக சிறிது காலம் சீல் வைத்து மூடப்பட்டிருந்தது.
எனினும் அன்பளிப்புச் செய்யப்பட்ட மேற்படி இல்லமானது அத்துமீறப்பட்ட வகையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. பெறுமதி மிக்க மிதக்கும் பொருட்கள், தளபாடங்கள் இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளன.
இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் முன்னேற்றகரமான செயற்பாடு என்ன? விசாரணைகள் இடம்பெறுகின்றனவா? குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனரா? தண்டனைக்குட்படுத்தப்பட்டனரா? எனக் கேள்வியெழுப்பினார்.
லக்ஷ்மன்
இதற்குப் பதிலளித்த அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல கூறுகையில்;
தமிழ் வைத்தியரான அமரர் சிவா சின்னத்தம்பி என்பது தனக்கு சொந்தமான இல்லத்தை கொழும்பு பல்கலக்கழகத்தின் மகளிர் விடுதிக்கென அன்பளிப்புச் செய்திருந்தார்.
இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்ட வீட்டின் பெறுமதிமிக்க தளபாடங்கள், பொருட்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளன. இந்த சம்பவம் 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்ட வீட்டின் பெறுமதிமிக்க தளபாடங்கள், பொருட்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளன. இந்த சம்பவம் 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இவ் இல்லமான கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சொகுசு ஹோட்டலாகவும் பாவிக்கப்பட்டு வந்தது.இது பாரிய குற்றச்செயலாகும். அதேவேளை, இங்கு இடம்பெற்ற திருட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு இரகசியப் பொலிஸாரிடமும் பாரப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தப்பிக்க விட முடியாது என்றார்.
அனுர
இதனையடுத்து இரண்டாவது கேள்வியொன்றைத் தொடுத்து அனுர குமார எம்.பி. இவ்விடயத்தில் பாரிய குற்றம் புரிந்த நபர் இந்த பாராளுமன்றத்திலே இருக்கிறார்.
(சபை முதல்வரின் ஆசனத்தில் இருந்து எண்ணியவாறு) ஆளும் கட்சியின் ஐந்தாவது ஆசனத்துக்கு சொந்தக்காரரே மேற்படி இல்லத்தில் பெருமதிமிக்க மிதக்கும் பொருட்களைத் திருடியவர் என்றார். எனினும் அனுர குமார எம்.பி.யினால் சுட்டிக்காட்டப்பட்ட ஆசனம் வெறுமையாகவே இருந்தது.
(சபை முதல்வரின் ஆசனத்தில் இருந்து எண்ணியவாறு) ஆளும் கட்சியின் ஐந்தாவது ஆசனத்துக்கு சொந்தக்காரரே மேற்படி இல்லத்தில் பெருமதிமிக்க மிதக்கும் பொருட்களைத் திருடியவர் என்றார். எனினும் அனுர குமார எம்.பி.யினால் சுட்டிக்காட்டப்பட்ட ஆசனம் வெறுமையாகவே இருந்தது.
0 Comments