Subscribe Us

header ads

மருத்­துவர் சிவா சின்­னத்­தம்பி கொழும்பு பல்­க­லைக்கு அன்­ப­ளித்த இல்­லத்தில் கொள்ளை :அனுர

டாக்டர் அமரர் செல்வி சிவா சின்­னத்­தம்­பி­யினால் கொழும்பு பல்­க­லைக்­க­ழக பெண்கள் விடு­திக்­கென அன்­ப­ளிப்பு செய்­ய­யப்­பட்ட கொழும்பில் உள்ள இல்­லத்தில் பெறு­ம­தி­மிக்க தள­பா­டங்கள் உள்­ளிட்ட மிதக்கும் பொருட்­களை பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்­சியின் சபை முதல்­வ­ரை­ய­டுத்து ஐந்­தா­வது ஆச­னத்­திற்கு சொந்­த­மா­ன­வரே திருடிச் சென்­றுள்ளார்.
இந்தத் திருட்டு தொடர்­பி­லான விசா­ர­ணை­களின் முன்­னேற்ற நிலை என்ன என்று எதிர்க்­கட்சிப் பிர­தம கொற­டா­வான அனுர குமார திசா­நா­யக்க நேற்று சபையில் கேள்­வி­யெ­ழுப்­பினார்.
இதற்குப் பதி­ல­ளித்த சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல கூறு­கையில் குறித்த சம்­ப­வ­மா­னது 2014 ஆம் ஆண்டு இடம்­பெற்­ற­தாகும். இது தொடர்பில் இர­க­சிய பொலி­ஸா­ருக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கும் முறைப்­பாடு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ் வைத்­தியப் பெண்­மணி ஒரு­வரால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட மேற்­படி இல்­ல­மா­னது இவ்­வாறு கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டி­ருப்­பது மட்­டு­மல்­லாது உல்­லாச விடு­தி­யா­கவும் கடந்த அர­சாங்கம் பாவ­னைக்­குட்­ப­டுத்­தி­யி­ருப்­பது பாரிய குற்றச் செய­லாகும் என்றும் குறிப்­பிட்டார்.
பாரா­ளு­மன்­றத்தின் நேற்­றைய செவ்­வாய்க்­கி­ழமை அமர்வில் வாய்­மூல விடைக்­கான நேரத்தில் ஜே.வி.பி.யின் நலிந்த ஜய­தி­லக்க எம்.பி. யினால் தொடுக்­கப்­பட்­டி­ருந்த கேள்­வியில் இடைக் கேள்­வி­யொன்றை எழுப்­பி­ய­போதே அனுர குமார திசா­நா­யக்க எம்.பி. மேற்­கண்­ட­வாறு கேள்­வி­யெ­ழுப்­பி­ய­துடன் அமைச்­சரும் பதி­ல­ளித்தார்.
கொழும்பு 7, ஹேவா ஒழுங்­கையில் 11 ஆம் இலக்­கத்தில் அமைந்­துள்­ள­தான மருத்­துவர் சிவா சின்­னத்­தம்­பிக்குச் சொந்­த­மான இல்லம் அவரால் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் மகளிர் விடு­திக்­கென அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்­டி­ருந்­தது.
நல்­லெண்­ணத்தின் அடிப்­ப­டையில் இவ்­வாறு தமிழ் மருத்­துவர் ஒரு­வரால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட இல்­ல­மா­னது வழக்கு விசா­ரணை ஒன்றின் கார­ண­மாக சிறிது காலம் சீல் வைத்து மூடப்­பட்­டி­ருந்­தது.
எனினும் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட மேற்­படி இல்­ல­மா­னது அத்­து­மீ­றப்­பட்ட வகையில் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது. பெறு­மதி மிக்க மிதக்கும் பொருட்கள், தள­பா­டங்கள் இவ்­வாறு திருடிச் செல்­லப்­பட்­டுள்­ளன.
இவ்­வி­வ­காரம் தொடர்பில் அர­சாங்கம் எடுத்­தி­ருக்கும் முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பாடு என்ன? விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­ற­னவா? குற்­ற­வா­ளிகள் கைது செய்­யப்­பட்­ட­னரா? தண்­ட­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­னரா? எனக் கேள்­வி­யெ­ழுப்­பினார்.
லக்ஷ்மன்
இதற்குப் பதி­ல­ளித்த அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல கூறு­கையில்;
தமிழ் வைத்­தி­ய­ரான அமரர் சிவா சின்­னத்­தம்பி என்­பது தனக்கு சொந்­த­மான இல்­லத்தை கொழும்பு பல்­க­லக்­க­ழ­கத்தின் மகளிர் விடு­திக்­கென அன்­ப­ளிப்புச் செய்­தி­ருந்தார்.
இவ்­வாறு அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்ட வீட்டின் பெறு­ம­தி­மிக்க தள­பா­டங்கள், பொருட்கள் திருடிச் செல்­லப்­பட்­டுள்­ளன. இந்த சம்­பவம் 2014 ஆம் ஆண்டு காலப் பகு­தி­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளது.
அத்­துடன் இவ் இல்­ல­மான கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் சொகுசு ஹோட்­ட­லா­கவும் பாவிக்­கப்­பட்டு வந்­தது.இது பாரிய குற்­றச்­செ­ய­லாகும்.  அதே­வேளை, இங்கு இடம்­பெற்ற திருட்­டுக்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு இர­க­சியப் பொலி­ஸா­ரி­டமும் பாரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. குற்­ற­வா­ளி­களை தப்­பிக்க விட முடி­யாது என்றார்.
அனுர
இத­னை­ய­டுத்து இரண்டாவது கேள்வியொன்றைத் தொடுத்து அனுர குமார எம்.பி. இவ்விடயத்தில் பாரிய குற்றம் புரிந்த நபர் இந்த பாராளுமன்றத்திலே இருக்கிறார்.
(சபை முதல்வரின் ஆசனத்தில் இருந்து எண்ணியவாறு) ஆளும் கட்சியின் ஐந்தாவது ஆசனத்துக்கு சொந்தக்காரரே மேற்படி இல்லத்தில் பெருமதிமிக்க மிதக்கும் பொருட்களைத் திருடியவர் என்றார். எனினும் அனுர குமார எம்.பி.யினால் சுட்டிக்காட்டப்பட்ட ஆசனம் வெறுமையாகவே இருந்தது.

Post a Comment

0 Comments