முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் தலைமையில் (திவிநெகும) வாழ்வின் எழுச்சி முகாமையாளர்கள்,வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்திய கண்காட்சி இன்று காலை 10 மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கபட்டது.
பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில் கிராம புறத்தில் உள்ள உள்ளுர் உற்பத்திகள் மற்றும் உள்ளுர் வளங்களை பயண்படுத்துவதின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் உற்பத்தியாளர்களுக்கு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் மன்னார் மாவட்ட வாழ்வின் எழுர்ச்சி உதவி பணிப்பாளர் சசீதரன், முசலி பிரதேச செயக உத்தியோகத்தர்கள்,சிலாவத்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள்,கடற்படை அதிகாரிகள்,பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எஸ்.எச்.எம்.வாஜித்
0 Comments