டாக்டர் பவுல் கிரேக் ராபட்ஸ், Dr. பவுல் க்ரைக் ராபர்ட்ஸ் (Dr. Paul Craig Roberts) அமெரிக்க கருவூலத்தின் (Treasury) முன்னாள் பிரதிச் செயலர், ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகை யின் கூட்டு ஆசிரியர், ஹூவர் கலாசாலையிலே ஒரு ஆராய்ச்சியாளர், அரசியற் பொருளாதார விரிவுரையாளர்...
அவர் கூறுகிறார்:
முஸ்லிம்களோ ஜனத்தொகையில் மிக அதிகம்.
ஆனால், அவர்களுக்கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம்.
“தம்மை அடிமைப்படுத்த முயலும் ஏகாதிபத்தியத்தை வெறுப்பதைவிட தம்மைத்தாமே வெறுத்துக்கொண்டும், தம்மைக்கண்டு தாமே பயந்துகொண்டும் இருக்கும்வரை முஸ்லிம்கள் தோற்றுக்கொண்டே இருப்பார்கள்!”
மேற்காணும் கருத்தை ஒரு கட்டுரையில் படித்தேன் ...இன்றைய யதார்த்தத்தை தெளிவாகவே , வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் !..
ஆனால் இதனை விளங்கி சீர் செய்ய யார்தான் முனைப்படுவார்கள் ?!...
உலகம் பூராவும் இதே நிலைதானே இன்னமும் நீடிக்கிறது என்பது மிகவும் கவலைக்குரியது !.. முஸ்லிம் கட்சி தலைவர்கள், ஊர் ஜமாஅத் தலைவர்கள் உணரவேண்டும் ?!.... இன்ஷா அல்லாஹ் .. இதற்காக நல்ல உள்ளம் படைத்த நல்லவர்கள் முன்வரவேண்டும்.. இன்ஷா அல்லாஹ் ...
-கவுஸ் முஹம்மத்-
0 Comments