ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன நேற்று பொலன்னறுவை, வெலிகந்த, மாஹாவெலி பிரதேச மக்களின் நலம் விசாரிக்கும் விஜயம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.
வெலிகந்த, மாஹாவெலி பிரதேசத்திற்கு விஜயம் செய்த சத்துரிக்கா சிறிசேன பிரதேச மக்களை மாஹாவெலி விகாரையில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது அந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அவர் விரைவில் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
சத்துரிக்கா சிறிசேனவின் இந்த விஜயத்தின் போது அரசாங்க அதிகாரிகள் சிலரும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments