Subscribe Us

header ads

கோட்டாபயவை பாதுகாப்பதற்கே பொய்ச் சாட்சி கூறினேன்-ஜயசுந்தர


பாரிய ஊழல், முறைகேடுகள் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவை பாதுகாப்பதற்காகவே பொய்யான சாட்சியைக் கூறியதாக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க வளாகத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் தான் பொய்ச் சாட்சி கூறியதாக அரச சட்டத்தரணிகள் முன்னிலையில் ஜயசுந்தர ஏற்றுக் கொண்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவின் மீது தான் வைத்த அளவு கடந்த அன்பின் காரணமாக அவரை ஆபத்தில் தள்ளிவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு பொய் கூறினேன் எனவும் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments