சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு பல்லாயிரக்கணக்கானோர் அகதியாக நாள்தோறும் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே பலர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த நாடுகளும் பெரிய அளவில் அவர்களுக்கு உதவிகள் எதுவும் செய்யவில்லை.
கடந்த வாரம் அகிதிகள் குழு ஒன்று ஐரோப்பாவிற்கு செல்லும் போது, துருக்கி அருகே அந்த படகு விபத்துகுள்ளானதில் ஆலன்(3) மற்றும் அவனது ஐந்து வயது சகோதரன் காலிப்(5) மற்றும் தாய் ரேகனா ஆகியோருடன் 12 சிரியர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள்.
உலகின் மனசாட்சியை உலுக்கிய சிரியாவைச் சேர்ந்த அந்த 3 வயது சிறுவனின் மரணத்திற்குப் பிறகு அகதிகளின் வாழ்வில் புதிய மாற்றம் சிறிய அளவிலேனும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பிரிட்டன் மக்கள் அகதிகளுக்கு உதவி புரியும் வகையில் ஒரே நாளில் 5 லட்சும் பவுண்டு நன்கொடையாக கொடுத்துள்ளனர். இந்த தொகை ஆயிரக்கணக்கான அகதிகளின் அடிப்படை தேவைகளுக்கும் உதவிக்கரமாக இருக்கும்.
0 Comments