Subscribe Us

header ads

கவிஜர் மிராஜ் பைரூனின் கொழுந்தியாள் பறித்துவந்த குறிஞ்சாங் கீரை..!!கவிதை


என் கொழுந்தியா பறிச்சி வந்தா 
கொழுந்தா குறிஞ்சங் கீர..

அத மயிரப்போல அரிஞ்செடுத்த 
அழக எப்படி கூற...

கீறு கீறா வெங்காயம் வெட்டி
கண்ணுல நீரும் ஊற..

என் மனைவி செஞ்சி தந்த சம்பல்
கசப்பு குறிஞ்சா கீர..

நறுக்கி போட்ட பச்ச மொளகா 
ஒறப்பு நாக்கில் ஏற..
சுள்ளுன்னு புளிக்கும் எழுமிச்சம் சாரால் 
எச்சில் அருவியும் ஊற..

பட்டுப்போல மாமி துருவிய தேங்காப்பூவையும்
போட்டு..
புத்தளத்து சொத்து தானே 
உப்பையும் கொஞ்சம் சேத்து..

பெனஞ்செடுத்த சம்பலப்பத்தி எப்படி நானு சொல்ல ..
கசப்பு குறிஞ்சா என்கிற பெயர 
மாத்தி வைங்கடி புள்ள..

மாத்தி வைங்கடி புள்ள!!

-Miraj Fairoon-

Post a Comment

0 Comments