19.08.2015 The Islan பத்திரிகையில் உணவடுனவை சேர்ந்த D.C அபேரத்னவினால் பகிரப்பட்ட தகவல்.
முன்னால் காலி பாராளுமன்ற உறுப்பினர் W. தஹனாயக பற்றியது. இவர் அமைச்சராகவும் குறுகிய காலத்திற்கு பிரதமராகவும் பதவி வகித்தவர். பாராளுமன்ற அமர்விற்காக காலியிலிருந்து கொழும்புக்கு இரயிலில் பயணம் செய்வார். பாராளுமன்றம் முன்னர் House of Representatives என அழைக்கப்பட்டது. காலிக்கு மீண்டும் இரயிலிலேயே திரும்புவார்.
இதனை எழுதும் அபேரத்னவிட்கு ஒரு முறை W. தஹனாயக அவர்களுடன் இரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. ஒரு முறை மாலை வேளையில் தஹனாயக அவர்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு செல்வதற்காக பாராளுமட்ரத்தின் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்சிட்காக காத்திருப்பதை கண்டிருக்கிறார். அவர் ஒரு முறை மாத்திரமே வெளிநாடு சென்று வந்துள்ளார். இதை ஒரு நண்பர் தஹனாயகவிற்கு "Travel broadens mind" என சொன்ன போது உடனே அவர் "சோக்ரடீஸ் ஏதன்ஸ் நகர எல்லையை தாண்டியதில்லை" என பதிலளித்தார்.
தமிழில் இம்தாத் பசர்
Note: ஆனால் இன்று ஒரு அமைச்சர் பயணிப்பதற்காக எவ்வளவு மக்களின் பணம் விரையம் செய்யப்படுகின்றது. அதுவும் வீண் படாடோபத்திட்காக.
0 Comments