Subscribe Us

header ads

மதுவை நெருங்காத சச்சின் - ஏன் தெரியுமா?



இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒழுக்கத்திலும் மேன்மையானவர். மது, புகையிலை பயன்படுத்தும் பழக்கம் எதுவும் அவரிடம் கிடையாது. சர்வதேச கிரிக்கெட் களத்தில் கால் நூற்றாண்டு காலம் அவர் நீடித்ததற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகும். 

இது தொடர்பாக கொச்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ‘புகையிலை மற்றும் மதுபானங்களை பிரபலப்படுத்தும் விளம்பரங்களில் ஒரு போதும் நடிக்க கூடாது என்று எனது தந்தை அறிவுரை வழங்கியிருந்தார். எனது தந்தையின் அறிவுரையை பின்பற்றி மது, புகையிலை ஆகியவற்றில் இருந்து நான் ஒதுங்கி இருக்கிறேன். 

இளைஞர்கள் தங்களது இலக்கை அடையும் வரை முயற்சியை விட்டுவிடக்கூடாது. சில சமயம் இவ்வளவு கடினமாக உழைத்தும் நாம் நினைத்தது நடக்கவில்லையே என்று நான் உணர்ந்தது உண்டு. உண்மை என்னவென்றால் மேலும் ஒரு அடி முயற்சித்தால் நிச்சயம் வெற்றி நம்மை தேடி வரும். எனவே நம்பிக்கையை இழக்காமல் விடாமுயற்சியில் ஈடுபடுங்கள்’ என்றார்.

Post a Comment

0 Comments