தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகி வருகிறார்கள். அந்தவகையில், தற்போது தினம் தோறும் நாம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகிவிட்ட அகதிகளின் துயரத்தை, வலியை உணர்த்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரகணக்கான மக்களை கண்ணீர் சிந்தவைத்து வருகிறது.
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது துருக்கி அருகே படகு விபத்துகுள்ளானதில் ஆய்லன்(3) மற்றும் அவனது ஐந்து வயது சகோதரன் காலிப்(5) மற்றும் தாய் ரேகனா ஆகியோருடன் 12 சிரியர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள்.
மத்திய தரைகடலில் மூழ்கி இறந்து போன ஆலனின் படம் வெளியாகி உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்க்க துவங்கியுள்ள நிலையில், இறந்து போன 3 வயது ஆய்லனின் தந்தை செய்தியாளர்களிடம் பேசியதாவது:
‘‘எங்களுக்கு நடந்த கொடூரத்தை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும். இந்த துயர சம்பவம் உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும், இதன் மூலம் மறுபடியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். இதுவே கடைசியாக இருக்கட்டும்” என அப்த்துல்லா தெரிவித்தார்.
0 Comments