பொகவந்தலாவ கெர்க்ஸ்வேல்ட் மேல்பிரிவு தோட்டத்தில் மருமகளின் கன்னத்தை மாமியார் கடித்து பதம் பார்த்த சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த தோட்ட்திற்கு மொனராகலை பிரதேசத்தில் இருந்து வந்த 18வயது மதிக்கதக்க யுவதி ஒருவருக்கே அந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த குடும்பத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கு ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி மாமியார் மருமகளின் கன்னத்தை கடித்து பதம்பார்த்துள்ளளர்.
காயமடைந்த யுவதியை பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குறித்த சிறுமிக்கு நாய் கடித்துள்ளதாக அறிவிக்கபட்டது.
அதன் பிறகு இன்று குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேசவாசி ஒருவரால் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
காயமடைந்த 18வயது யுவதி தொடர்ந்தும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுமியின் மாமியாரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணைகளை பொலிஸார் அரம்பித்துள்ளனர்.
0 Comments