Subscribe Us

header ads

2020ம் ஆண்டுவரை இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது



எதிர்வரும் ஐந்து வருடங்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவோ மாற்றவோ இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

இந்த அரசாங்கம் நீண்டகாலம் இருக்காது கவிழ்க்க முடியும் என சிலர் கூறுவதாகவும் அது நடக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். 

எதிர்வரும் 2020ம் ஆண்டுவரை அரசாங்கத்தை கவிழ்க்க எவரும் எதிர்பார்க்க கூடாது என்றும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டதெனவும் ஜனாதிபதி கூறினார். 

பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் பதவிபிரமாணம் செய்யும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments