Subscribe Us

header ads

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் முழு பொறுப்பும் எனக்கு உண்டு : ஜனாதிபதி

எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் முழு பொறுப்பும் எனக்கு உண்டு. மாற்றமில்லாத தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நான் பாடுபடுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.
சபாநாயகர், பிரதி சபாநாயகர், அவைத்தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் முதல் அமர்வில் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கொள்கை பிரகடன உரை நிகழ்த்தினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
எமது நாட்டு வரலாற்றில் சமாதானமாக இடம்பெற்ற தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்பட்டு உங்கள் முன் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜனவரி 8ஆம் திகதி நான் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டபோது எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி.
நாட்டுக்குப் பொறுத்தமான தேர்தல் முறையை கொண்டுவரவேண்டியது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். ஒவ்வொரு அரசாங்கத்துக்கு அரசாங்கம், ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மாற்றம் கொண்டுவருவது போலல்லாது மாற்றமில்லாத தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நான் பாடுபடுவேன்.
எனக்குத் தெரிந்த வகையில் மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் முன் நிறைய சவால்கள் உண்டு.
இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை மக்கள் உபயோகிக்கிறார்கள். இன்று கிராம மட்டத்தில் கூட டெப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான சூழ்நிலையிலேயே நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் முழு பொறுப்பும் எனக்கு உண்டு. அதனை காத்திரமான முறையில் செயலாற்ற அனைவரினதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறேன்.

Post a Comment

0 Comments