Subscribe Us

header ads

மஹிந்­த­வினால் எம்.பி.யாக இருக்க முடி­யு­மாயின் அமைச்­சர்கள் இரா­ஜாங்க அமைச்­ச­ராக முடி­யாதா?


பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க வும் நானும் சர்­வ­தே­சத்­திற்கு அடி­ப­ணிந்து தேசதுரோ­கி­க­ளாக செயற்ப­டு­வ­தாக குற்­றஞ்­சாட்­டு­கின் றனர். புதிய அர­சாங்கம் என்ற வகையில் சர்­வ­தேச அழுத்­த­த்திற்கு நாம் ஒரு­போதும் அடி­ப­ணிந்து செயற்ப­டப்­போ­வ­தில்லை.

எமது பய­ணத்தில் நாம் உண்­மை­யான தேச­ப் பற்­று­ள்­ள­வர்கள் என்­ப­தனை விரைவில் நாட்­டுக்கு நிரூ­பித்துக் காட்­டுவோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.
அடுத்த ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்போ அல்­லது 2020 இற்கு முன்போ எக்­கா­ரணம் கொண்டும் இந்த பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்­க­மு­டியும் என்று நினைக்க வேண்டாம். மேலும் ஐந்து வருட அர­சி­யலில் குறை நிறை­யு­டைய குழந்தை பிறப்­பினை ஒரு­போதும் எதிர்­பார்க்க வேண்டாம். அடுத்த ஐந்து வரு­டங்­களில் நிரந்­த­ர­மான அர­சாங்­கத்தை நாங்கள் உரு­வாக்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் பத்து வரு­டங்கள் ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து விட்டு தற்­போது சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­க­மு­டி­யு­மாயின் அமைச்­சர்­க­ளாக இருந்­த­வர்கள் இர­ஜாங்க அமைச்­சர்­க­ளானால் என்ன தவறு உள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
19 இர­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் 21 பிரதி அமைச்­சர்­களும் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் பத­வி­யேற்கும் நிகழ்வில் உரை­க­லந்­து­கொண்­டுப உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மேலும் உரை­யாற்­று­கையில்,
தற்­போ­தைய யுகத்­திற்கு ஏற்றால் போல் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் நிறு­வு­வ­தற்கு ஆத­ரவு நல்­கி­ய­மை­யிட்டு நான் இரண்டு கட்­சி­க­ளி­னதும் பிர­தி­ந­தி­க­ளுக்கு நன்றி தெரி­வித்து கொள்­கின்றேன்.
ஜனா­தி­பதி என்ற வகையில் நானும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் என்று அனை­வரும் அமைச்சு பத­வி­க­ளி­னூ­டாக கிடைக்கும் வர­பி­ர­சா­தங்­களை பெற்று, எமது வாழக்கை மேம்­ப­டுத்­து­வ­தற்கு பத­வி­களை பெற­வில்லை. மாறாக நாட்டு மக்­க­ளுக்கு உரிய வகையில் சேவை­யாற்­று­வ­தற்­கே­யாகும். இது எமக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள பாரிய பொறுப்­பாகும்.
அர­சியல் பயணம் என்­பது பார்ப்­ப­தற்கு அழ­காக இருக்­கலாம். ஆனால் எமது பய­ணத்தில் பல்­வேறு சவால்கள் நிறைந்­துள்­ள­மையை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டில் புதிய அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்தும் பய­ணத்தின் போது பல்­வேறு சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யேற்­படும்.
நாட்டில் நல்­லாட்­சி­யையும் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­துவோம் என்று மக்கள் எங்கள் மீது நம்­பிக்கை வைத்­துள்­ளனர். அதற்கு நாம் துரோகம் செய்ய கூடாது.
நாட்டை ஆட்சி செய்த ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து தற்­போது கருத்­தொ­ரு­மைப்­பாட்டு அர­சியல் பய­ணத்தில் இணைந்­த­மை­யிட்டு நான் மகிழ்ச்சி அடை­கின்றேன்.

இந்த நாட்டில் இரண்டு பிர­தான கட்­சி­களும் வேறு­வே­றாக ஆட்சி செய்த தரு­ணத்தில் பல்­வேறு உயிர்­களை பழி கொடுக்க வேண்­டி­யேற்­பட்­டது. இரண்டு கட்­சி­யி­னரும் முட்டி மோதி கொண்­டனர். ஆனால் தற்­போது நாட்டில் புதிய அர­சியல் கலா­சாரம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த பய­ணத்­திற்கு அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும்.
இதே­வேளை தற்­போது மைத்­தி­ரியும் ரணிலும் சர்­வ­தே­சத்­திற்கு ஏற்றால் போல் ஆட்­சியை கொண்டு செல்­வ­தா­கவும் சர்­வ­தே­சத்­திற்கு அடிப்­ப­ணிந்து நடப்­ப­தா­கவும் பல்­வேறு விமர்­ச­னங்­களை செய்து வரு­கின்­றனர். தேச­து­ரோ­கி­க­ளாக நடப்­ப­தா­கவும் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர். எந்த தரு­ணத்­திலும் நாட்டு மக்­க­ளுக்கு ஒரு விட­யத்தை தெளி­வாக புரிந்துக் கொள்­ள­வேண்டும். புதிய அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்தும் பய­ணத்தின் போது நாம் சர்­வ­தே­சத்­திற்கு அடிப்­ப­ணிந்து செயற்­ப­ட­வில்லை.
புதிய அர­சாங்கம் எக்­கா­ரணம் கொண்டு சர்­வ­தேச நாடு­களின் அச்­ச­றுத்­தல்­க­ளுக்கோ அழுத்­தங்­க­ளுக்கோ பயந்து அடிப்­ப­ணிய போவ­தில்லை. எமது பய­ணத்தின் அடுத்த நகர்­வு­களின் போதும் எதிர்­வரும் காலங்­களின் போதும் நாம் உண்­மை­யான தேசப்­பற்­றுள்­ள­வர்கள் என்­ப­தனை நிரு­பித்து காட்­டுவோம். நாட்­டிற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் நாம் ஒரு­போதும் செயற்­ப­ட­போ­வ­தில்லை.
நாட்டில் உள்ள அனைத்து மத சிந்­த­னை­க­ளையும் கொண்டு நாட்டு மக்கள் ஒன்­றி­ணைய வேண்டும். பிள­வுக்கு முன்­னு­ரிமை வழங்­காது ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதே சிறந்த வழி­மு­றை­யாகும். நேர்மை, தியா­கத்தை கொண்டு புதிய அர­சியல் கலா­சா­ரத்­திற்­கான பய­ணத்தை தீர்­மா­னிக்க வேண்­டி­யுள்­ளது. இரண்டு வரு­டங்­களின் பின்னர் தேசிய அர­சாங்கம் தொடர்பில் உறு­தி­யான முடி­வினை எடுக்க வேண்டும்.
தேர்தல் முடி­வு­களை கொண்டு தற்­போது பலர் பல்­வேறு கருத்­துக்­களை கூறி­வ­ரு­கின்­றனர். .இந்த அர­சாங்கம் நிரந்­த­ர­மா­னது அல்ல. நீண்ட காலம் பய­ணிக்­காது. விரைவில் இந்த அர­சாங்கம் கலைந்து விடும் என்று பர­வ­லாக குறிப்­பிட்டு வரு­கின்­றனர். இந்­நி­லையில் அனை­வரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அடுத்த ஐந்து வரு­டத்­திற்கு முன்போ அல்­லது 2020 இற்கு முன்போ எக்­கா­ரணம் கொண்டு இந்த அர­சாங்­கத்தை கலைக்­கலாம் என்று நினைக்க வேண்டாம்.
அடுத்த ஐந்து வரு­டத்­திற்குள் அர­சியல் குறை நிறை கொண்ட குழந்தை பிறப்­பினை எதிர்­பார்க்க வேண்டாம். அமைச்­சர்கள் ,இர­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிரதி அமைச்­சர்கள் தெரிவின் போதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் நானும் பாரிய சவால்­களை எதிர்­கொண்டோம். அமைச்­சர்கள் நிய­மனம் தொடர்பில் அனை­வரும் விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். வெளியில் இருந்து விமர்­சனம் செய்­வது இல­கு­வாகும். இருப்­பினும் குறித்த சவால்­க­ளுக்கு நாம் முகங்கொடுக்கும் போதுதான் அதன் வேதனைகள் புரியும். எவ்வாறாயினும் எமது பயணத்தின் போது பல்வேறு சவால்களை நாம் வெற்றி கொள்வோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பத்து வருடங்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து விட்டு தற்போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருக்கமுடியுமாயின் ஏன் அமைச்சர்களாக இருந்தவர்கள் இரஜாங்க அமைச்சர்களானால் என்ன தவறு உள்ளது.
இதேவேளை ஊழல் மோசடிகளிலிருந்து முழுமையாக இந்த நாட்டை விடுப்பட செய்யவேண்டும். ஆகையால் உங்கள் மீது ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை மோசடிகளின்றி செய்து காட்டுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments