துருக்கி கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்ட சிரியாவின் பச்சிளம் குழந்தை அய்லானின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு-07 தும்முல்லை சந்தியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை அலுவலகம் முன்பாக நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தை மனிதநேய பராமரிப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தங்களின் அழிவுகளை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு எதிராக கண்டனக் குரல்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்படவுள்ளது.
அய்லான் போன்ற பச்சிளம் பாலகர்கள் யுத்தக் கொடூரங்கள் காரணமாக உயிரிழப்பதைத் தடுப்பதில் ஆர்வம் கொண்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் என பெருந்தொகையானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments