புத்தளம், கல்பிட்டி பிரதேசத்தினைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, கல்பிட்டி பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை (02) நடைபெற்றது.
வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீட்டுக்கான ஓடுகள், சீமெந்து கற்கள், தையல் இயந்திரங்கள், கதிரைகள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் என்பன வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-KV Reporter-
0 Comments