Subscribe Us

header ads

தபாலக கழிவறைக் குழியில் 10 ஆயிரம் கடிதங்கள்


மொரட்டுவ பிரதான தபால் காரியாலய கழிவறைக் குழியொன்றிலிருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான சாதாரண ரக கடிதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
தேர்தல் காலத்தில் கட்சிகளினால் கட்சி ஆதரவாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் இதில் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தபால் தொழில் சங்கங்களின் ஒன்றிய ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தராதரம் பார்க்காமல் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments