எம்பிலிபிடிய - பனாமுர வீதியில் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் மற்றும் சாரதி ஆகியோர் மீது ஆசிட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதனால் படுகாயமடைந்த இருவரும் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் எம்பிலிபிடிய பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் நேற்றையதினம் பாதிக்கப்பட்ட குறித்த பெண் கடத்தப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எம்பிலிபிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments