Subscribe Us

header ads

ஜனாதிபதிக்கு எதிராக சட்டத்தரணி உண்ணாவிரதப் போராட்டம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டத்தரணி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமர்ந்து அவர் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். தோல்வியடைந்த அரசியல்வாதிகளை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தமைக்கு எதிராகவே இந்த போராட்டத்தை குறித்த சட்டத்தரணி ஆரம்பித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட தோல்வியடைந்த, எஸ்.பி. திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, அங்கஜன் இராமநாதன், ஹிஸ்புல்லா, பியசேன கமகே, நந்திமித்ர ஏக்கநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால ஆகியோர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையின் பேரிலேயே இவர்கள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments