Subscribe Us

header ads

அநுரகுமாரவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மர்ம மனிதன் யார்?


மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திசாநாயக்கத்திற்கு புதிதாக வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

இந்த தொலைபேசி அழைப்பானது நாடாளுமன்றம் கூடிய அன்று மாலை எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்தே கிடைத்துள்ளன.

“மதிப்புக்குரிய அமைச்சர் அவர்களே” நான் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்து பேசுகின்றேன். அந்த விவாதத்திற்கு காலத்தை எவ்வாறு ஒதுக்கிக்கொள்வது? என நபர் ஒருவர் அநுரகுமாரவிடம் வினவியுள்ளார்.

குறித்த தொலைபேசி அழைப்பாளரிடம்  கேள்வி எழுப்பிய திசாநாயக்க, “எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்து யார் பேசுகின்றீர்கள்” என அவர் வினவியுள்ளார்.

எனினும் இதுவரையில் அந்த அழைப்பை ஏற்படுத்தியவர் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

Post a Comment

0 Comments