Subscribe Us

header ads

வெளிநாடுகளில் வேலைக்கு சென்று துன்பம் அனுபவிக்கும் பெண்கள்



வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் நம் உறவினர்களை பிரிந்து இருக்க நம் மனம் விருப்பபடுவதில்லை. குடும்ப கஷ்டத்திற்காக வெளிநாடு செல்லும் ஆண்கள் அங்கு பலவித துன்பங்களை அனுபவிக்கின்றனர். ஆண்களின் நிலையை கூட ஏற்றுக்கொள்ளலாம். 

குடும்ப கஷ்டத்திற்காக பெண்கள் வெளிநாடுகள் செல்வது மிகவும் கொடுமையானது. உயர் படிப்பு படித்து விட்டு வெளிநாடு வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிக்கும் பெண்கள் பற்றி கவலையில்லை. படிக்காமல் வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் அங்கு பல மணி நேரம் வேலை கொடுத்து கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

பல வீட்டு எஜமானிகள் இந்தியா, இலங்கை ,உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் ஏழை பெண்களை சரியான உணவு தராமல் மாத ஊதியம் தராமல் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். இது சம்பந்தமாக அந்த நாட்டு அரசாங்கங்கள் பல சட்ட திட்டங்கள் போட்டாலும் இங்கிருந்து பெண்கள் அங்கு வேலைக்கு செல்வதையும் பலவிதத்தில் கொடுமைப்படுத்தபடுவதையும் தடுக்க முடியவில்லை.

வீட்டில் இருக்கும் ஆண்களால் சில பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர். இது விஷயமாக மொழி தெரியாத அந்நிய நாட்டில் யாரை அணுகுவது என்ற விவரம் கூட படிப்பறிவில்லாத இந்த பெண்களுக்கு தெரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சவுதி அரசு சட்டப்படி நடுரோட்டில் தலை சீவி கொல்லப்பட்டாள் இத்தனைக்கும் அந்த பெண் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது புரையேறி குழந்தௌ இறந்துவிட்டது என கூறப்படுகிறது. சவுதி அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் சற்று கடுமையானது நம் நாடு போல நம்மை நிரூபிக்க நிறைய நீதிமன்றங்கள் கிடையாது.

கஷ்டப்படும் பெண்கள் இங்கிருக்கும் கஷ்டங்களை தாங்கி கொண்டு இங்கிருந்தே வாழ பழகிகொள்வது சிறந்தது. வெளிநாடு வேலைகளுக்கு அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வீட்டு வேலைக்கு செல்லும்போது நன்கு ஆராய்ந்து முடிவெடுத்து கூட்டி செல்லும் நபரின் ஒழுக்கம், அங்குள்ள சூழ்நிலை இதனை அறிந்து செல்வது நலம் பயக்கும்

Post a Comment

0 Comments