கண்ணியம்மிக்க இஸ்லாமிய மார்க்கம் தற்போது ஐக்கிய ராஜ்ஜியத்தில் இரண்டாவது பெரிய மார்க்கமாக வளர்ந்துள்ளது, தற்போதைய மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2,706,066 ஆக மிக வேகமாக வளர்ந்தமைக்கு அமைய கணிப்பீட்டின் படி 2050 இல் இம்மார்க்கமானது பெரும்பான்மை வகிக்கும் என்று வினவப்படுகின்றது.
கடந்த மாதம் இங்கிலாந்தில் "லெஸ்டர்" நகரில் வசிக்கும் எமது நாட்டு முஸ்லிம் சமுகத்தின் உழைப்பினாலும் இறைவனின் அருளினாலும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று ஏலத்தில் உச்ச கேட்பு விலையில் வெற்றி பெற்று பள்ளிவாசலாக மாற்றப்பட்டுள்ளது. இப்பள்ளி வாசலை இலங்கை அக்கரைப்பற்றை சேர்ந்த இஸ்மாயில் நஈமுட்டீன் ஆசிரியர் அவர்கள் முதல் அதான் ஒலிக்கச் செய்து திறந்து வைத்தார்.
இதன் அடிப்படையில் தற்போது லெஸ்டர் நகரில் இந்த வருடம் பள்ளி வாசல்களின் மொத்த எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளதுடன், ஐக்கிய இராஜ்ஜியத்தில் மொத்த இயங்கி வரும் பள்ளி வாசல்களின் எண்ணிக்கை 1741 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பல பள்ளி வாசல்கள் கட்டுமானப்பணியிலும், ஏலத்தில் விடப்பட்டிருக்கும் தேவாலயங்களை வாங்கி பள்ளிவாசலாக்கும் முயற்சியில் முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அனைத்துப் புகழும் இறைவனுக்கே.
அஹ்மத்.
0 Comments