ஒசாமா பின்லேடன் இன்னும் சாகவில்லை. அவர் அமெரிக்க உளவுத்துறையின் பாதுகாப்பில் சொகுசாக வாழ்ந்து வருகிறானர் என எட்வர்ட் ஸ்னோடன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அமெரிக்கா குறித்து பல குற்றச்சாட்டுக்களையும் அவர் முன் வைத்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர் எட்வர்ட் ஸ்னோடன். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பயந் து இவர் 2013ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் இருந்து வருகிறார். இவர், சமீபத்தில் இணையதளம் ஒன்றில் பரபரப்பு கட்டுரை வெளியிட்டுள்ளார். அந்த கட்டுரையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கட்டுரையில் ஸ்னோடன் குறிப்பிட்டுள்ளதாவது : ஒசாமா பின்லாடன் சாகவில்லை. அவர் இப்போதும் உயிருடன் இருக்கிறார். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ.,வின் பாதுகாப்பில் வட அமெரிக்காவின் பகாமாவில் அவர் வசித்து வருகிறார். பின்லேடன் சொகுசாக வாழ்வதற்காக, சிஐஏ அவருக்கு மாதந்தோறும் 100,000க்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்து வருகிறது. இந்த தொகை சில தொழிலதிபர்கள் மற்றும் அமைப்புக்கள் மூலம் நாஸாக் வங்கிக் கணக்கு வழியாக அனுப்பப்படுகிறது.
ஒசாமா எங்கிருக்கிறார் என எனக்கு சரியாக தெரியாது. ஆனால், 2013ம் ஆண்டிலிருந்து தனது 5 மனைவிகள் மற்றும் ஏராளமான குழந்தைகளுடன் அவர் அமெரிக்க உளவுத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறார். இதற்கு என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. அவரைக் கொன்று விட்டதாக அமெரிக்கா நாடகம் ஆடுகிறது. இதற்கு பாகிஸ்தான் ரகசிய அமைப்பும் உடந்தை. போலியான ஆவணங்களை வெளியிட்டதால் அவர் இறந்து விட்டதாக அனைவரும் நம்பி விட்டனர்.
ஒசாமாவின் உடலையும் யாரிடமும் அவர்கள் காண்பிக்கவில்லை. இவைகளை பயன்படுத்தி தான் ஒசாமாவை தலைமறைவாக்கி உள்ளனர். தாடி இல்லாமல், ராணுவ உடையில் இருப்பதால் அவனை யாரும் இதுவரை அடையாளம் காண முடியவில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒசாமா உயிருடன் இருப்பதற்கான பல ஆதாரங்களையும், அவருக்கு அமெரிக்கா உதவி வருவதற்கான ஆதாரங்களையும் தான் எழுதி உள்ள புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக கூறும் ஸ்னோடன், அந்த புத்தகத்தை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-அதிரைபிறை-
0 Comments