இங்கிலாந்தில் உள்ள லெய்சிஸ்டர் நகரில் வசித்துவரும் கேத்தரினா பையர்ஸ்(33) என்கிற பெண்மணி, தனது மகனை 4 மாத கருவாக அழிக்க விரும்பாமல், அவனைப் பற்றிய மருத்துவர்களின் கருத்துக்களை பொய்யாக்கி அவனின் உற்ற துணையாக இருக்கும் அம்மா.
நான்கு மாத கருவாக இருக்கும்போதே, அந்தக் குழந்தை பிறந்தாலும் நடமாட முடியாத நிலையில்தான் இருக்கும் என்கிற மருத்துவரின் ஆலோசனையை கேட்டுக்கொள்ளாமல் குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தார் கேத்தரினா. 90 கிராம்களே இருந்த அவனை பெற்றெடுத்தார் அவர்.
அந்நாட்டின் பிர்மிங்ஹாம் நகர மருத்துவமனையில் கடந்த 2011-ம் ஆண்டு, ஏழு மாதங்களில் சிறுவன் லிவாய் பில்ப்ஸ் 90 கிராமில், 10 யூரோ டாலர் நோட்டின் அளவில் ஆபரேஷன் மூலம் பிறந்தான். பிறந்த இரண்டு மாதங்களுக்கு குழாய் மூலம் உணவூட்டல், மூன்று மாதங்களில் இதயத்தின் ஓட்டையை நீக்க அறுவை சிகிச்சை என அவனுக்கு ஏற்பட்ட அடுக்கடுக்கான பிரச்சனைகளுக்கு காரணம் இன்று வரை தெரியவில்லை.
இதயத்தில் மூன்று ஓட்டைகளை சீராக்கிய பின், சிறுநீரகம் வேலை செய்யவில்லை, குறைந்த ரத்த அழுத்தம் வேறு என அந்தக் குழந்தைக்கு பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. எதற்கும் அஞ்சாத அம்மா அந்தக் குழந்தையை முதன் முறையாக நேற்று அவனை நான்கு வயது சிறுவனாக பெருமிதத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
தற்போது நான்கு வயதில் ஒன்றரை வயது குழந்தையின் அளவே இருக்கிறான் லிவாய். அவன் மற்ற சிறுவர்களுடன் விளையாடும் ஆசையில் நேற்று காலை எழுந்ததும், பள்ளிக்கு தயாராக வேண்டும். நண்பர்களுடன் விளையாட வேண்டும் என்கிற தனது ஆசைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.
பள்ளி முதல் நாளான நேற்று அம்மாவுடனேயே பள்ளிக்குச் சென்று எந்த தயக்கமோ, பயமோ இன்றி தன்னை எல்லோரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனை அங்கிருக்கும் சக மாணவர்கள் ஏற்றுக்கொள்வார்களா மாட்டார்களா? என்ற பதட்டத்துடனேயே பள்ளி நேரம் முடியும்வரைக் காத்திருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார் அவனது அன்பு அம்மா.
உங்கள் பிள்ளையை முதல் நாள் பள்ளிக்கு அனுப்பியது நினைவிருக்கிறதா?
0 Comments