பொதுவாக வாகனம் ஓட்டுவதில் ஆண்கள்தான் சிறந்து விளங்குவர் என உளவியல் கூட சொல்கிறது. காலங்காலமாக அடுப்படிக்குள்ளேயே வாழ்ந்து முடித்துவிட்ட பெண்களுக்கு, புதிதாக வாகனம் ஓட்டுவதால் கொஞ்சம் மேலோட்டமாகவே வாகனம் ஓட்டுவதாகவும், டிராபிக் விதிமுறைகளை பற்றி எவ்வித முன்யோசனையும் இல்லாதிருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு.
ஆனால், சிறப்பாக கனரக வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி, பாகிஸ்தானின் முதல் பெண்ணாக பொது சேவை வாகனத்தை ஓட்டும் உரிமத்தையும் பெற்றிருக்கிறார், பேகம் ஷமீம் அக்தர்(53). கடந்த 2013-ம் ஆண்டு இவரது கணவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், குடும்பம் வருமானமின்றி தவித்தது.
பேகம் தமது மூன்று பெண் பிள்ளைகளுக்கும் குறைந்தபட்ச கல்வியை அளித்தது மட்டுமின்றி அவர்களது திருமணச் செலவையும் கவனித்துக் கொண்டார். தற்போது சிறிய அளவில், வாகனப் பயிற்சி அளித்துவரும் அவர், தமது தகுதிக்கு ஏற்ற அரசுப் பணி வழங்குமாறு, நாட்டின் பிரதமர் மற்றும், மாநில முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தனது இந்த வளர்ச்சிக்கு காரணமாக, இஸ்லாமாபாத்தின் டிராபிக் போலீசாரை பேகம் பணிவுடன் குறிப்பிடுகிறார். பேகம் போன்ற பெண்கள் பாகிஸ்தானின் பெண்களின் தைரியம் மற்றும் மனோபலத்திற்கு மட்டுமின்றி மொத்த மனித சமூகத்துக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
0 Comments