கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விமல் வீரவன்ச, ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்டதாக வெளியாகிய செய்தி தொடர்பில் நேற்று முன்னணி தலைவர்கள் சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தனது கருத்தக்களை வெளியிட்டுள்ளார்.
தான் அந்த செய்தியை பார்த்து ஆச்சரியப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மன்னிப்பு கேட்கும் சம்பவம் ஒன்று கடந்த 31ஆம் திகதி இடம்பெறவில்லை என கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைவருக்கும் தெரியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விமல் வீரவன்சவுக்கு தனது வருத்தத்தினை வெளியிடுவதாகவும் இது மிகவும் மோசமான ஒரு செயல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி:
0 Comments