Subscribe Us

header ads

மங்கள, மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்தார்! ஐ.நா அறிக்கைக்கு 5 நாட்களில் இலங்கை பதில்

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உள்ளிட்டு இலங்கையின் இராஜதந்திரிகள் நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்துள்ளனர்.

ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை, இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மாநாட்டின் 30வது அமர்வின் போது இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்.

இதன்போது அவர் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்கு ஆதரவை கோரவுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 30ம் திகதியன்று இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளார்

Post a Comment

0 Comments