ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 35ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை கொழும்பு அல்ஹிதாயா பாடசாலைக் கேட்போர்கூடத்தில் வெற்றிகரமாக நடை பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் உயர் அங்கத்தவர்களாகிய ருகூன் மற்றும் இணை அங்கத்தவர்கள் மேலும் கிளைப் பொறுப்பாளர்களும் கிளைச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வின் விஷேட அம்சங்களாக உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுடனான கலந்துரையாடல், அஷெய்க் நிசாம் (காசிமி) அவர்களுது சொற்பொழிவு, இஸ்லாமியப் பாடல்கள் மற்றும் கவிதைகள், வருடாந்த அறிக்கை சமர்ப்பணம் மேலும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 2௦16ஆம் வருடத்திற்கான தேசியத்தலைவர், மத்தியசபை உறுப்பினர்கள், பிராந்தியத் தலைவர்களுக்கான தெரிவு நடைபெற்றன.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 2௦16ஆம் வருடத்திற்கான தேசியத்தலைவராக சகோதரர். M.L.M.Thoufeek அவர்கள் ருகூன் அங்கத்தவர்களின் வக்கெடுப்பினூடாக தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 21ஆவது தேசியத்தலைவர் ஓர் சிறப்புப் பார்வை சகோதரர். M.L.M.Thoufeek அனுராதபுரம், வீரச்சோலை கிராமத்தில் ஹுசைனியா மற்றும் லாபீர் தம்பதியினருக்கு புதல்வராகப் பிறந்தார். மருதமுனை அல்மனார் மத்தியக்கல்லூரியின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது அவர் 2005-2006 ஆம் காலப்பகுதியில் பாடசாலையின் சிரேஷ்ட மானவத்தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது பள்ளிக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாத் தின பேச்சுப் போட்டியில் தனகப்பதக்கம் வென்றார், மேலும் பாடசாலையின், சுகாதாரக் கழகம், இலக்கிய மன்றம் மற்றும் மாணவர் ஒன்றியம் போன்றவற்றில் தலைவராக கடமையாற்றியுள்ளா இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது கலைமாணிப் பட்டத்தை நிறைவுசெய்தார்.
2௦௦2 ஆம் ஆண்டு மருதமுனைக் கிளை அஸ்ஸாபீர் (ஸ்ரீ.இ.மா.இ. த்தின் சிறுவர்களுக்கான இஸ்லாமிய வகுப்பு) ஊடாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்திள் இணைந்த இவர் 2008,2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு மருதமுனை கிளை ஷூரா அங்கத்தவராக கடமையாற்றினார்.
2௦௦8 ஆம் ஆண்டு முழு நேர ஊழியராகக் கடமைபுரியத் தொடங்கிய அவர் இன்றுவரை ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஓர் முழு நேர ஊழியராகக் கடமையாற்றுகின்றார்.
பின்னர் 2010/2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்குப்பிராந்திய பாடசாளைப்பகுதி பொறுப்பாளராக பணிபுரிந்தார். 2011 ஆம் ஆண்டு ருகூன் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு மேற்குப் பிராந்திய செயலாளராக பணியாற்றினார். 2013ஆம் ஆண்டு வடமத்தியப் பிராந்திய நாசிமாக (தலைவராக) தெரிவு செய்யப்பட்டார். 2014/2015 ஆம் ஆண்டு தேசிய ஒருங்கினப்பாளராக செயற்பட்டார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 35ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 21 ஆவது தேசிய நாசிமாக (தேசியத் தலைவர்) ருன்கூன் அங்கத்தவர்களால் தெரிவு
0 Comments