செல்போன்களின் மூலம் தங்களைத் தாங்களே படம்பிடித்து நண்பர்கள் மற்றும் தோழியருடன் பரிமாறி மகிழும் ‘செல்பி மோகம்’ உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. செல்பி மூலம் படம்பிடித்து இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் வழக்கம் முன்னர் பெண்களிடம் மட்டுமே அதிகமாக காணப்பட்ட நிலையில் தற்போது ஆண்களுக்கும் இந்த மோகம் தொற்றிக் கொண்டுள்ளது.
இதன்விளைவாக, அடிக்கடி செல்பி எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த ஒரு வாலிபர், தற்போது செல்பி கலையில் படுவேகமாக முன்னேறி, மணிக்கு சுமார் 1700 செல்பிக்களை‘ கிளிக்கித் தள்ளுகிறார்’. இதன்மூலம் புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தவும் ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த பானு பிரகாஷ் ராச்சா என்ற அந்த வாலிபர் முடிவு செய்துள்ளார்.
மூன்றே நிமிடங்களில் சுமார் 120 செல்பி படங்களை பிடித்து பயிற்சி செய்துவரும் கின்னஸ் சாதனை படைக்க நினைக்கும் தனது ஆசையை கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபல ஷாப்பிங் மாலில் வரும் 18-ம் தேதி இந்த உலக சாதனை முயற்சியை இவர் நிகழ்த்தவுள்ளார்.
இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றால் தென்மேற்கு அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த பேட்ரிக் பீட்டர்சன் என்பவர் ஏற்படுத்திய மணிக்கு 1,449 செல்பி புகைப்படங்கள் என்ற முந்தைய சாதனையை பானு பிரகாஷ் ராச்சா முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments