Subscribe Us

header ads

முஸ்லிம் காங்கிரஸ் பேசுவதற்கு தரவுகள் இல்லை கண்டபடி உளருகிறார்



முஸ்லிம் காங்கிரஸ் பேசுவதற்கு தரவுகள் இல்லை கன்டபடி உளருகிறார் மேலும் தேர்தலில் எந்தவித ஆசனமும் மு.கா பெறா என்று அண்மையில் மருதமுனையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மாகாண சபை உருப்பினர் துல்சான் அவர்கள் கூறி இருந்தார். இதற்கான பதில்
உண்மையில் V.c இஸ்மாயில் அவர்களின் விவகாரமானது எல்லோர் இடத்திலும் சந்தேகப் பார்வையை ஏற்படுத்தியுள்ளது.



ஒரு பாராளுமன்ற தேர்தலில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் போட்டியிடுவதென்றால் வேட்புமனு பத்திரத்தில் ஒப்பமிட முன்பு தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கை தெளிவாக கூறுகின்றது. 



ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் உபவேந்தரான கலாநிதி இஸ்மாயில் அவர்கள் தனது சிரேஷ்ட விரிவுரையாளர் பதவியை இராஜினமா செய்தாரா? இல்லையா? என்பதில் ஓர்சந்தேக நிலைமை ஏற்பட்டுள்ளது



இதனாலேயே முஸ்லிம் காங்கிரசின் அதி உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி முஸ்தபா அவர்களால் இதன் உண்மைத் தன்மையைஅறிந்து கொள்ளம மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தினையே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள் சம்மாந்துறையில் நடந்த கூட்டத்தில் மக்கள் முன் எடுத்துரைத்தார்.

அதாவது நாம் இந்த விடயத்தினை ஓர் நடுநிலையாக நின்று ரவூப் ஹக்கீம் கூறிய விடயத்தினை நோக்குவோமாயின் இந்த தேர்தலானது எம் முஸ்லிம் சமூகத்திற்கு முக்கிய தேர்தலாகவே உள்ளது. ஆகவே மக்கள் அளிக்கின்ற வாக்குகளானது பெறுமதியாகவே மதிக்கப்படுகின்றது. அது மாத்திரம் அல்லாமல் இந்த விவகாரத்தில் நாம் இனங்கண்டு கொள்ளக் கூடிய விடயமானது நாம் அளிக்கின்ற வாக்கானது அங்கு களமிறங்கும் இஸ்மாயில் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையிலேயே இடுவோம்.

பின்னர் தேர்தல் முடிந்த பிற்பாடு நாம் அளித்த வாக்குக்கு பாராளுமன்றம் செல்ல முடியாமல் போனால் நாம் அளித்த வாக்குக்கு நாம் விரும்பாத. ஒருவர் இஸ்மாயில் அவர்களுக்கு அளித்த வாக்கினை எடுத்துக் கொண்டு பாராளுமன்றம் செல்லவும் வாய்புள்ளது. இந்த விடயத்தை பொருத்தவறை நாம் ஹக்கீம் அவர்களுக்கு பாராட்டவே வேண்டும் ஏனெனில் ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள் மூக்குடைந்து போயுள்ளதாகவும், பொய் கூறுவதாகவும், மக்கள் காங்கிரசின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் ஏதேதோ உளறுகின்றார் என்றும் மருதமுனையை சேர்ந்த முன்னாள் மாகான சபை உறுப்பினர் துல்கர் நயீம் அவர்கள் கூறியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கூற்று பிழை என்றால் இவர்களால் இதுவரையில் சட்டவல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான வாதத்தினை முன்வைக்க முடியவில்லை. 


இந்த விடயம் ஆனது ஓர் அரசியல் நோக்கத்திற்காக றஊப் ஹக்கீம் கூறி இருந்தாலும் மறைமுகமாக மக்கள் நலனே எடுத்து நிற்கின்றது என்பது நிதர்சன உண்மை




முதலில் இந்த துல்சான் என்றழைக்கப்படும் துல்கர் நயீம் என்பவர் யாரென்று நாங்கள் அறியாமலில்லை. ஆனால் அவரோ தன்னை மறந்து கூறுகின்றாரா? அல்லது மக்களின் மறதியில் அபார நம்பிக்கையா என்று தெரியவில்லை. இவர் ஆயிரம் வாக்குகள் கூட தனது சொந்த ஊரில் பெறமுடியாதவராக இருந்தும், அதாவுல்லாவின் தயவினால் அக்கரைப்பற்று மக்களின் வாக்குகளினால் கடந்த 2008 ஆம் ஆண்டு மாகான சபை உறுப்பினரானார். இது இவரது வாழ்நாளில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு மகுடமாகும்.

ஆனால் தனக்கு அரசியல் அந்தஸ்து வழங்கிய அதாஉல்லாவுக்கு துரோகம் செய்துவிட்டு முஸ்லிம் காங்கிரசில் இணைந்து அதாஉல்லாவை விமர்சித்ததோடு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமை மேடை மேடையாக பீக்கர் கட்டி வாயார புகழ்ந்து பேசித்திரிந்தார். பின்பு ஹக்கீமிடம் பதவிகள் கிடைக்கவில்லை என்பதனால் இன்று ரிசாத் பதியுதீனுடன் சேர்ந்துகொண்டு பதவிக்காக ஹக்கீமை விமர்சிக்கின்றார். இங்கே விடயம் என்னவென்றால் துல்கர் நயீம் அவர்களால் கூறப்பட்டதில் எதனை நம்புவது? ஹக்கீம் பதவி வழங்கியிருந்தால் இன்று ஹக்கீமை விமர்சிப்பாரா? எல்லாம் எழும்புத் துண்டுகளுக்காகத்தான் என்பது புரிகின்றதல்லவா?  



அம்பாறை மாவட்ட களநிலவரத்தை உற்று நோக்கினால் கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சம்மாந்துறை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசத்தில் நடத்திய கூட்டத்துக்கு பின்பு மயில் ஆட்டம் கண்டுள்ளது என்பது நன்கு புலனாகின்றது. ஆனால் முளுப்பூசனிக்கையை சோற்றுக்குள் மறைப்பதுபோன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரும் வெற்றிபெறமாட்டார்கள் என்று கூறியதன் மூலம் துல்கர் நயீம் அவர்கள் அரசியலில் தான் ஒரு சிறுபிள்ளை என்பதனை நிரூபித்துள்ளார்.  



இம்மாவட்டத்தில் அதிகம் செல்வாக்குள்ள கட்சியான முஸ்லிம் காங்கிரசும், ஐ.தே.கட்சியும் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுவதனால் முஸ்லிம்களும், சிங்களவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்போது, ஐ.தே.கட்சிக்கு அளிக்கும் சிங்களவர்களின் வாக்குகளைவிட அதிகமான வாக்குகள் முஸ்லிம் காங்கிரசின் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும். அதில் மூன்று வேட்பாளர்களுக்கும் தங்களது விருப்பு வாக்கினை முஸ்லிம்கள் வழங்குவர். முஸ்லிம்களிடம் இருக்கும் ஒற்றுமை அம்பாறையில் சிங்களவர்களிடம் காணப்படவில்லை என்பது அங்குள்ள கள நிலவரத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. இதனால் ஐ.தே.கட்சி மூலம் மூன்று வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அது முஸ்லிம் வேட்பாளர்களுக்கே சந்தர்ப்பம் அதிகமாக இருக்கின்றது.  



இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக ஒரு உறுப்பினர்கூட வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லமாட்டார் என்று முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துல்கர் நயீம் அவர்கள் கூறியதையிட்டு அவருடன் நான் சவால் விடுகின்றேன். அதாவது ‘ நான் கூறுகின்றேன் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக பெறமுடியும் ‘ என்று. இந்த சவாலை ஏற்க துல்கர் நயீம் அவர்கள் தயாரா? 



அரசியலில் அனுபவமுள்ள முன்னாள் மாகான சபை உறுப்பினர் துல்சான் அவர்களுடன் எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாத சாதாரனமகனான எனது சவாலை ஏற்பாரா? மக்களின் கைத்தட்டலுக்காகவும், எதிர்காலங்களில் பதவியை பெறுவதற்காக தனது தலைவரிடத்தில் தான் ஒரு விசுவாசி என்று காட்டிக்கொள்வதற்காகவும் மக்களை மடையர்கள் என்று நினைத்து வாய்க்கு வந்ததெல்லாம் உளறித்திரியும் அரசியல் வாதிகளுக்கு இது ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.

SAMZUL A RASHEED

Post a Comment

0 Comments