Subscribe Us

header ads

எமது வெற்றி சதிமுயற்சியின் காரணமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது – ரிஷாத் பதியுதீன்


முஸ்லிம்களின் அரசியல் அதிகாரக் களம் என்றும் முதுகெலும்பென்றும் வர்ணிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் கன்னி முயற்சியாக கால்பதித்து தனித்து நின்று ஒரே மாதத்திற்குள் 33 ஆயிரத்து 102 வாக்குகளைப் பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனது வெற்றியின் முதலாவது மைக்கல்லை எட்டியுள்ளதுடன், எமது கட்சியினையும், தலைமைத்துவத்தினை அங்கரித்த அனைத்து மக்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (29) அவர் விடுத்த நன்றி செய்தியில் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களின் உரிமைக்காக உருவாக்கப்பட்ட தலைமைத்துவம், மறைந்த பெருந்தலைவர் அஷ்ரபிற்குப் பின்னர் வலுவிழந்து, உரிமைப் போராட்டங்களில் தயக்கத்தோடு பின்வாங்கிய துர்ப்பாக்கிய நிலையின் காரணமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உதயம் காலத்தின் தேவையாக அமைந்து விட்டது. இத்தேர்தலில் நீங்கள் அளித்த வாக்குப் பொதிகள் உமது கட்சியின் எதிர்கால வெற்றிக்கு கட்டியம் கூறுவதோடு நல்லதொரு வெள்ளோட்டமாகவும் அமைந்து விட்டது என்றால் அது மிகையாகாது.

நீங்கள் அளித்த வாக்குகள் பணபலம், அடியாட்களின் அட்டகாசங்கள், அரச அதிகாரிகளின் முறையற்ற செல்வாக்கு ஆகியவற்றுக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டு பெறப்பட்ட உறுதியான வாக்குகளாகவே அமைந்துள்ளதுடன் எமது வெற்றி சதிமுயற்சியின் காரணமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நல்லலோர்களின் உன்னத கீர்த்திக்குக் காரணம் அவர்களின் பொறுமையும், உறுதியான நம்பிக்கையுஆமயாகும் என்று கூறுவதை இங்கு ஞாபகப்படுத்துவதோடு, அத்தகைய பண்பகளை நாமும் பின்பற்றுவோமாக எனக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனவே, உன்னத சமூதாயம் ஒன்றை அமைக்க உள்ளப்புரிப்போடு தேர்தல் களமிறங்கி, இழந்து போன அரசியல் உரிமைகளை நிலைநாட்ட திரண்டு வந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சின்னமான மயிலுக்கு வாக்களித்து எமது கட்சியையும், தலைமையையும் அங்கீகரித்த உலமாக்கள், இளைஞர்கள், யுவதிகள், தாய்மார்கள், புத்திஜீவிகள், வர்த்தக சமூகத்தினைர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட அனைவரோடும் கைகோர்த்து எதிர்வரும் காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் இப்பயணத்தை தொடர்வேன். என அவர் தனது நன்றிச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments