பொதுத் தேர்தலுக்கான நாட்கள் நெருங்க நெருங்க, அதற்கான பிரசாரப்பணிகளும் புதுப்புது வடிவத்தில் மேற்கொள்ளப்படுவதனை நிதனமும் அவதானிக்க முடிகின்றது.
அதன்படி ஜி.தரங்கய என்பவர் தனது தலைமுடியை சிகை அலங்காரம் மூலம் தேர்தல் பிரசாரத்தினை மேற்கொண்டுவருகின்றார்.
மாத்தறை, தெவிநுவர பகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், எண், மற்றும் புள்ளடி அடையாளங்களை அவர் தனது முடியை கத்தரித்து அதற்கு ஏற்றால் போல் வடிவமைத்துள்ளார்.
இதன் மூலம் மற்றவர்களிடம் இதை கொண்டு செல்லலாம் என்பதை அவர் வித்தியாசமான முறையில் யோசித்திருப்பதாக அவரை கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் சிகை அலங்காரம் செய்வதற்கு 800ரூபாவை செலவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments