இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா பதுளையில் “பெரிடோல் நஞ்சினை அருந்த வேண்டிய நிலைமை எற்படும் என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பதுளையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான நிலையினை டிலான் பெரேரா தெளிவுபடுத்தியுள்ளார் என ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல் தேர்தலின் பின்னர் அக்கட்சியினர் நஞ்சருந்த வேண்டும் என அவர் நஞ்சுப் போத்தல்களுடன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பில் நஞ்சுப்போத்தல்களுடன் கலந்துக்கொண்டு ரணில் உட்பட ஐவர் நஞ்சருந்த வேண்டும் என கூறியமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments