Subscribe Us

உழைத்துக்களைத்து விட்டால் உடல் ஓய்வை நாடுவது போல அதீத கவலையால் உள்ளமும் சோர்வுருவதுண்டு.


உழைத்துக்களைத்து விட்டால் உடல் ஓய்வை நாடுவது போல அதீத கவலையால் உள்ளமும் சோர்வுருவதுண்டு. இரண்டு வருட ஓட்டம் இளைஞ்சர்களை இளைப்பாறத் தூண்டுகின்றது என நினைக்கிறேன். அண்மையில் பதிவிடும் postகளை பார்க்கும் போது வெற்றி உறுதியாகிவிட்டது என ஒரு சிலரின் சிலாகிப்புகளால் சகோதரர்கள் ஒரு வகையான comfort zone இற்குள் இளைப்பாற எண்ணுவதாக தோன்றுகின்றது. போட்டியில் எதிரி வெல்வதற்கு எமது பலவீனம் காரணமாகிவிடக் கூடாது. பத்திரிகைகள் இன்று ஒன்றை கூறிவிட்டு நாளை மற்றொன்றை கூறும். அரசியல் அவதானிகள்(political analyst) என்போர் சிறப்புத்தேர்ச்சி பெற்ற அவதானிகள். கொழும்பில் இருந்து கொண்டு வெளியூர்களில் தெரிந்தவர்கள் ஓரிருவருக்கு தொலைபேசியில் அழைத்து விட்டு மாவட்டங்களில் மக்களின் துடிப்பை கூறுபவர்கள் அல்ல. ஆகவே அவர் சொன்னார் இவர் எதிர்வு கூறினார் என்பதற்காக உழைப்பை நிறுத்தி விடாதீர்கள். சொன்னவர்களின் நோக்கம் நல்லதாகவே படுகின்றது. ஆனால் முட்டையிட்ட கோழிக்கு தான் மூல வருத்தம் விளங்கும்.

வாசி பார்த்து வரவு பார்த்து இறுதி நேரத்தில் அவசர முடிவெடுக்கும் அரசியல் வேதாந்திகளை விட நீண்ட நாள் முயற்சிக்கும் முன்மாதிரி இளைஞ்சர்கள் நீங்கள். இறுதி முடிவுகள் தளம்பலில் முடிந்து விட்டது ஒரு சோதனையே. சம்பிரதாய அரசியல் மேடைப்பேச்சுக்கள் உங்களில் தொற்றிக்கொண்ட பலவீனமே. அடுத்த முறை பலவீனங்களை களைய முயற்சிப்பீர்களாக.

இம்முறை எங்களின் வாக்கு மாற்று அரசியல் சிந்தனைக்கே. வென்றுவிட்டால் உங்களுக்கு இரண்டு வெற்றி. பிரதிநிதி என்ற வெற்றியும் மாற்று சிந்தனை என்ற வெற்றியும். பிரதிநிதி வராவிட்டால் உங்களுக்கு ஒரு வெற்றி. சிந்தனை மாற்றத்தை முன்வைத்து முயற்சி செய்தீர்கள் என்ற ஒன்றே அது. இந்த ஒரு வெற்றி அடுத்த தேர்தலின் போது இரு வெற்றிகளுக்கு முழுப்பலம் சேர்க்கும் இன்ஷா அல்லாஹ். மக்களிடத்தில் முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைக்கும் இன்ஷா அல்லாஹ்.

பத்திரிகைகளினதும் தனி நபர்களினதும் எதிர்வு கூறல்களை உச்சாகமூட்டலாக எடுத்துக்கொள்ளுங்கள் உத்தரவாதமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

-Imthath Basar-

Post a Comment

0 Comments