Subscribe Us

சுமு­க­மான தேர்­தலை நடத்த முடியும் என்­பதை உல­குக்கு காட்­டி­யுள்ளோம்

எங்­க­ளுக்கு இலங்­கைக்குள் அமை­தி­யான முறையில் தேர்தல் ஒன்­றினை நடத்த முடியும் என்­பதை இம்­முறை பார­ளு­மன்றத் தேர்­த­லா­னது உல­குக்கு சொல்­லி­யுள்­ளது. 2012 ஆம் ஆண்டு முதல் இது வரை 11 தேர்­தல்கள் இடம்­பெற்­றுள்ள நிலையில் அவற்றில் மிக அமை­தி­யா­கவும் சுமு­­க­மா­கவும் நடை பெற்ற தேர்தல் இதுவே என பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் தெரி­வித்தார்.
எனவே அடுத்து வரும் ஒரு வார காலத்­துக்கு தேர்­தல்கள் சட்­டத்தின் பிர­காரம் தேர்­தலின் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் வன்­மு­றைகள் அத்­து­மீ­றல்கள் இன்றி அமை­தி­யான சூழலை பேணவும் சட்டம் ஒழுங்­கினை அமுல் செய்­யவும் பொது மக்கள் தொடர்ந்தும் பொலி­ஸா­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்­டுக்­கொண்டார்.
பொலிஸ் தல­மை­யக கேட்போர் கூடத்தில் நேற்று பிற்­பகல் இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் தலை­மையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவ­ரத்ன ( நிர்­வாகம் மற்றும் தேர்தல் விவ­காரம்), மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ம அதிபர் பூஜித ஜய­சுந்­தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் பெரேரா (பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் விவ­காரம்) மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர ஆகி­யோரின் பங்­கேற்­புடன் இந்த செய்­தி­யாளர் சந்­திப்பு இடம்­பெற்­றது.
இதன் போது பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் தொடர்ந்து தெரி­வித்­த­தா­வது, நேற்று ( நேற்று முன் தினம்) இடம்­பெற்ற தேர்­தலே இலங்­கையில் இடம்­பெற்ற தேர்­தல்­களில் மிகவும் அமை­தி­யான தேர்­த­லாக கரு­தப்­ப­டு­கின்­றது. 2012 முதல் இது­வரை 11 தேர்­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. 9 மாகாண சபை தேர்­தல்கள், 1 ஜனா­தி­பதி தேர்­த­லுடன் இடம்­பெற்று முடிந்த பாரா­ளு­மன்ற தேர்தல் ஆகி­யன அதில் அடங்கும். இதில் நடந்து முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலே மிகவும் அமை­தி­யாக இடம்­பெற்­றுள்­ளது.
இந்த தேர்­தலை அமை­தி­யா­கவும் சுமு­க­மா­கவும் நடத்தி முடிக்க பொலிஸார் விசேட அர்ப்­ப­ணிப்­புடன் கூடிய கட­மை­யினை செய்­துள்­ளனர். அத்­துடன் அபேட்­ச­கர்கள், வாக்­கா­ளர்கள், பொது மக்கள், சுயேச்சை குழுக்கள், கண்­கா­ணிப்­பா­ளர்கள் மற்றும் ஊடக நிறு­வ­னங்கள் என அனை­வ­ருக்கும் நான் எனது நன்­றியை தெரி­விக்­கின்றேன்.
எம்து கட­மை­களை நிறை­வேற்ற அவர்கள் அளித்த ஒத்­து­ழைப்­பையும் நான் மெச்­சு­கின்றேன். உண்­மையில் இந்த தேர்­தலில் பொலிஸார் தேர்­தல்கள் சட்­டத்தை நிலை நாட்ட தொடர்ச்­சி­யாக சுற்றி வளைப்­புக்­களை மேற்­கொண்­ட­மையே இம்­முறை அமை­தி­யான தேர்தல் ஒன்­றினை நடத்த பெரிதும் உத­வி­யது.
இம்­முறை தேர்தல்கள் முறைப்­பா­டு­களை விட பொலி­ஸாரின் நடவடிக்கை கார­ண­மாக கைதுசெய்­யப்­பட்­ட­வர்­களே அதி­க­மாகும். தேர்­தல்கள் தொடர்பில் எமக்கு மொத்­த­மாக 313 முறைப்­பா­டு­களே கிடைத்­தி­ருந்த நிலையில் 405 சுற்றி வளைப்­புக்­களை நாம் மேற்­கொண்டு சட்ட நடவடிக்கை எடுத்­துள்ளோம்.
அதன்­படி நாம் 799 பேரை கைதுசெய்துள்­ள­துடன் 251 வாக­னங்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்ளோம். கைப்­பற்­றப்­பட்ட வாக­னங்­களில் கைய­ளிக்­கப்­ப­டாத அரச வாக­னங்­களும் உள்­ள­டங்கும். இதனை விட வாக்­க­ளிப்பு தின­மான நேற்று மட்டும் 48 பேர் கைது செய்­யப்­பட்­ட­துடன் 18 வாக­னங்­களும் மீட்­கப்­பட்­டன.
இந் நிலையில் தேர்தல் சட்­டத்தை மதித்து இது வரை சட்டம் ஒழுங்கை காக்க பொலிஸார் எடுத்த முயற்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய மக்கள், தேர்­தலின் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என கோரு­கின்றேன்.
தேர்தல் கால­ப்ப­கு­தியில் பொலிஸார் தமது உயி­ரையும் துச்­ச­மென மதித்து கடமை செய்­த­தா­லேயே இவ்­வா­றான சுமுக தேர்­தலை நடத்த முடிந்­தது. வெலி­கமை பகு­தியில் பொலிஸார் ஒரு­வரின் கை இரு வேறு துண்­டு­க­ளாக செல்லும் அள­வுக்கு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது.
தேர்தல் சட்­டத்தை காக்க சென்ற வேளை இடம்­பெற்ற இச்­சம்பவம் மிகவும் துர­திஷ்­ட­வ­ச­மா­னது. அவ­ரது கையை மீண்டும் பொருத்­திய வைத்­தி­­யர்­க­ளுக்கு நான் நன்றி கூறு­கின்றேன். தேர்தல் சட்­டத்தை நிலை நாட்­டிய கான்ஸ்­டபிள் தரம் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தரம் வரை­யி­லான அனைத்து பொலிஸ் அதி­கா­ரி­களும் மெச்­சத்­த­க்க­வர்கள். எனவே இதே சுமு­க­மான நிலைமை தேர்­தலின் பின்­ன­ரான காலப்பகுதியிலும் நீடிக்க வேண்டும்.
அதனால் வெற்றியை கொண்டாடுவோர் அதனை மிக அமை தியாக கொண்டாடுங்கள். மற்றவரின் மனது புண் படாது, அவர்களின் உரிமைகளையும் மதிக்கத் தக்கதாக உங்கள் கொண்டாட்டங்கள் அமையட்டும். தேர்தலின் பின்னரான ஒரு வார காலப்பகுதியில் ஊர்வலங்கள், பேரணிகளை நடத்துவதை தவிர்த்து தேர்தல் சட்டங்களை நிலை நாட்ட ஒத்துழைப்பு வழங்குங்கள். என்றார்.

Post a Comment

0 Comments