Subscribe Us

header ads

செல்பியில் பதிவான தொலைந்துபோன மகனின் உருவம்: இன்ப அதிர்ச்சியில் தாய்

பிரித்தானியாவில் பெண் ஒருவர் எடுத்த செல்பி புகைப்படத்தில் ஒரு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன அவரது மகனின் உருவம் பதிவான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் லெஸ்லே எட்வர்ட். கடந்த ஆண்டு இவரது மகன் ஜொன் ஆண்டர்சன் எட்வார்ட் போர்சுகல் நாட்டில் தங்கி இருந்தபோது வேலையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அவரை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டேம்ஃபொர்ட் பாலத்தில் செல்சியா மற்றும் ஃபியொரெண்டினா கால்பந்து அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை லெஸ்லே பார்க்கசென்றுள்ளார்.

அப்போது போட்டியின் இடையே அவர் செல்பி எடுத்துள்ளார். பின்னர் அந்த புகைப்படத்தை தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த அவரது நண்பர் அதில் காணாமல் போன அவரது மகன் இருப்பதை போன்று தெரிவதாக கூறியுள்ளார்.

பின்னர் புகைப்படத்தை நன்றாக பார்த்த லெஸ்லே பின்வரிசையில் நிற்பவர் தனது மகன் போலவே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

எனினும் அது தனது மகன் இல்லையென்றும் அவனை போலவே உள்ள வேறொருவர் என்றும் லெஸ்லே தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments